koonandiyurpanchayat

koonandiyurpanchayat
KOONANDIYUR PANCHAYAT

Monday, September 28, 2015

கேது பகவான் (கேது தசை)

கேது  :


                   மோட்சக்காரகன், ஞானக்காரகன் என்று அழைக்கப்படும் கேது பகவான் மனித பிறவியின் அர்தத்தை உணத்தக்கூடிய பணியை செய்து வருகிறார். நமது கர்ம வினைக்கு ஏற்ப நமக்கு பலன்களை அருள்கிறார். குறிப்பாக கேது பகவான் தன் தசா புத்திகளில் பெரும் கெடுதல்களை செய்து மனிதனுக்கு ஞான மார்க்கத்தை வழங்குகிறார்.

 சோதனை 1 : 
                    உங்களுக்குள் பல்வேறு திறமைகள் இருந்தும் அவற்றை வெளிபடுத்த முடியாமல் தடை ஏற்படுகிறதா? ஏதோ ஒன்று உங்களை செயல்பட விடாமல் தடையாய் நிற்கிறதா? நீங்கள் செலுத்திய கடும் உழைப்பிற்கு உரிய பலன் கிடைக்கவில்லையா? உங்களுக்கு மட்டும் உங்கள் காரியங்கள் தாமதம் ஆகின்றதா? வாழ்கையின் மீது விரக்தி, வேதனை, துன்பம் உண்டாகின்றதா? 
                 உங்கள் ஜாதகத்தை சோதித்து பாருங்கள்  உங்களுக்கு கேது தசை அல்லது கேது புத்தி நடந்து கொண்டிருக்கும்.

சோதனை 2 :
                   நல்ல முறையில் ஓடிக்கொண்டிருந்த தொழிலில் தீடீரென நஷ்டம் ஏற்பட்டு பெரும் பொருள் இழப்பு ஏற்பட்டதா? சரி வேறு ஒரு தொழில் செய்யலாம் என முயற்சித்து பல தடைகளை கடந்து தொழில் தொடங்கியும் வருமானம் இல்லையா?  கடனும் கஷ்டமுமே மிஞ்சிய நிலையா? படிப்பில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்க வில்லையா? போட்டிதேர்வில் ஓரிரு மதிப்பெண்களில் உங்களுக்கு கிடைக்கவேண்டிய பணி நழுவியதா?
             உங்களுக்கும் கேதுவின் தாக்கமே..
சோதனை 3 :
                 காதல் தோல்வி, திருமண தடை, திருமண தாமதம், கணவன் மனைவி பிரிவு, சுற்றத்தாரால் கலவரம், தாத்தா பாட்டி திடீர் மரணம் இவை அனைத்தும் கேதுவால் விளையும் பயன்கள் ஆகும்.
கேது தசை :           
                       கேது தசை மேற்கண்ட கெடு பலன்களை வழங்கி வாழ்க்கையில் நமக்கு ஞானம் புகட்டக்கூடியவர் ஆவார். நமக்கு மட்டும் ஏன் இவ்வளவு சோதனை? என்ன இது வாழ்க்கை? என விரக்தி மேல் விரக்தியை வழங்குவார். பெண்களால் கலகம், பைத்தியம், திக்குவாய், மனக்குழப்பம், போன்றவற்றை வழங்கிடுவார். மனதில் இனம் புரியாத கவலைகளை தந்து கோவில் குளம் என அலைய வைப்பார். ஜோதிடர், சித்தர்களை தேடி செல்ல வைப்பார்.
                             மனதில் குழப்பமும் செயல்களில் தடை தாமதமும் சமுதாயத்தில் அவப்பெயரும் கொடுத்து புலம்ப வைப்பார். இவை அனைத்தும் நன்மைக்கே.. ஏனெனில் நமது கர்ம வினை முடிகின்றது என சந்தோஷபட்டுக் கொள்ளலாம்.

துன்பத்தை கடந்தே இன்பம் : 
                                          7 ஆண்டுகள் கேதுவால் பல சோதனைகள் வந்தபோது அவற்றை பொறுமையாக தாங்கிக்கொண்டு கேது தசையை கடந்தவர்களுக்கு கேது தசைக்கு அடுத்து வரும் சுக்கிர தசை சகல பாக்கியங்களையும் அருளி இன்ப வெள்ளத்தில் நீராட்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. கடினமான துன்பங்களை கடந்து வந்தவர்களே வாழ்கையில் இன்பத்தையும் அனுபவிக்கின்றனர். 
                                        துன்பத்தில் பிறந்து துன்பத்திலே இறந்தவர்கள் யாரும் இல்லை. இன்பத்தில் பிறந்து இன்பத்திலே இறந்தவர்கள் யாரும் இல்லை. துன்பத்தை கடந்த பிறகே இன்பம். எனவே தளராமல் நடைபோடு.. கேது உன்னை நல்வழி படுத்துகிறார். கேது உனக்கு வாழ்க்கையின் கஷ்டங்களைப் புரிய வைத்து உன் வாழ்வை ஒழுங்கு படுத்தி உனக்கு ஒளிமயமான எதிகாலத்தை உண்டு செய்கிறார். கேது பகவான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டார்.                      
                                                         நன்றி....

Friday, September 18, 2015

கேது - விநாயகர் - பவானி

விநாயகர் :


                    கேது தசை மற்றும் கேது புத்தி குறித்த விரிவான பலன்கள்   

                   
                                                                                                         விரைவில்  

               இளம் வயது விநாயக பக்தன்..
 

Thursday, September 3, 2015

நடிகர் விஜய் & அஜீத் ஜாதகப்பலன்கள்

நடிகர் விஜய் மற்றும் நடிகர் அஜித் ஜாதகங்களின் ஒற்றுமைகள்


                கடக ராசி, நம் இந்திய நாட்டின் ராசி. கடகம். நாட்டின் தலைச்சிறந்த தலைவர்கள், பொதுநலவாதிகள், ஆன்மீகவாதிகள், கலைஞர்கள் போன்றோர்களில் கடக ராசியினரே மிக மிக அதிகம். நேரு, இந்திரா காந்தி, மன்மோகன் சிங், அப்துல்கலாம், கர்மவீரர் காமராஜர், கலைஞர் கருணாநிதி, கவியரசு கண்ணதாசன், ராமலிங்க வள்ளலார், ஸ்ரீ ராமர் ஆகியோர் கடக ராசி அல்லது கடக லக்கினத்தில் பிறந்தவர்களே ஆகும்.

                         தமிழ் திரை உலகில் மிகவும் பிரபலமான நடிகர்களாகத் திகழும் நடிகர் விஜய் மற்றும் அஜீத் ஆகிய இருவரின்பிறந்த ஜாதகத்தின் அடிப்படையில் பார்க்கும் போது இருவருமே மிகவும் சக்தி வாய்ந்த கடக ராசியில் பிறந்தவர்கள். இருவரும் ஒரே ராசியினர் மட்டும் அல்ல நட்சத்திரத்திலும் ஒரே நட்சத்திரக்காரர்கள். 

                        ஆம் 27 நட்சத்திரங்களில் மிகவும் வலிமை வாய்ந்த சக்தி வாய்ந்த நீதி, நேர்மை, உண்மை, கருணை, பாசம், பண்பு, பணிவு, கடின உழைப்பு எனும் நற்குணங்களை பெற்ற தேவ கணம் (தெய்வீக குணம்) கொண்ட சனீஸ்வர பகவானின் பூச நட்சத்திரத்தில் ஜனித்த புண்ணியவான்கள் நம் தல தளபதிகள். 

                     சனியின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்கள் பட்ட கஷ்ட்டங்கள், தோல்விகள், அவமானங்கள், ஏமாற்றங்கள் ஏராளம் இருக்கும். பிறந்தது முதல் 30 ஆண்டு காலம் பல்வேறு சோதனைகளுக்கு ஆளாகி எந்த ஒரு காரியத்திலும் முதல் நிலையில் தோல்வியை தழுவி இரண்டாம் முயற்சியில் வெற்றியை அடைந்தவர்கள் அடையக்கூடியவர்கள்.

               சந்திரனின் ராசியில் உதித்த இவர்களின் மனது மென்மையானது, கற்பனை ரசனை மிக்கது, இனிமையான குளிமையான பேச்சை உடையது, கருணை கடல் போன்றது. பெண்களை மதிக்ககூடியவர்கள். தாயின் மீது அதீத அன்பு கொண்டவர்கள். பெண்களின் அன்பு ஆதரவு உதவிகளை வாழ்நாள் முழுவதும் பெறக்கூடியவர்கள்.

விஜய் ஜாதக கிரக அமைப்புகள் ;


                     விஜய் அவர்கள் கடக லக்கினம் கடக ராசி பூச நட்சத்திரத்தில் பிறந்தவர். லக்கினத்தில் சசி மங்கள யோகத்துடன் சந்திரன் செவ்வாய் கூட்டணி, 5 ல் ராகு, 8 ல் குரு, லாபஸ்தானத்தில் சுக்கிரன் கேது, 12 ல் சனி சூரியன் புதன் ஆகிய கிரக அமைப்பில் பிறந்த இவரது ஜாதகத்தில் சந்திரன், சுக்கிரன், புதன் ஆகிய 3 கிரகங்கள் ஆட்சி (90 % பலம்) பெற்றுள்ளது.

அஜீத் ஜாதக கிரகஅமைப்புகள் :

         
                     அஜீத் அவர்கள் கன்னி லக்கினம் கடக ராசி பூச நட்சத்திரத்தில் பிறந்தவர். லக்கினாதிபதி புதன் 7 ஆம் வீட்டில் நீசபங்க ராஜ யோகத்தில் சுக்கிரனுடன் கூட்டணி. லக்கினத்தில் சந்திரனுடன் கேது, 3 ல் குரு, 5 ல் செவ்வாய் ராகு, 8 ல் சூரியன், பாக்கியஸ்தானத்தில் சனி ஆகிய கிரக அமைப்பில் பிறந்த இவரது ஜாதகத்தில் செவ்வாய், சுக்கிரன், சூரியன் ஆகிய 3 கிரகங்கள் உச்சம் (100 % பலம்) பெற்றுள்ளது. மேலும் சந்திரன்  ஆட்சி  (90 % பலம்).
விஜய் அஜீத் ஜாதகப்பலன்கள் :


                        விஜய் அஜீத் ஜாதத்தில் பல்வேறு யோகங்கள் மற்றும் திருப்புமுனைகள் காணப்படுகின்றன ஜோதிடம் படித்தவர்களுக்கு இவர்களது ராசி கட்டத்தை பார்த்தாலே அது தெரியும்.
                     ஆயினும் இவர்களது குணா நலன்கள் மற்றும் நடப்பு தசா புத்தி பலன்கள் மற்றும் எதிகாலத்தில் இவர்களின் வாழ்க்கை நிலை போன்ற முக்கியமான செய்திகள் குறித்து அடுத்த பதிவில் விரிவாக பார்ப்போம்..
                                                                                 நன்றி...                      (தொடரும்) 


Wednesday, September 2, 2015

விவிலியம் - நீதிக்கு இலக்கணம் (பகுதி 2)




அதிகாரம் - 4


1.     பிள்ளைகளே! தந்தையின் போதனைக்குச் செவிசாயுங்கள்: மெய்யுணர்வை அடையும்படி அதில் கவனம் செலுத்துங்கள்.
2.     நான் உங்களுக்கு நற்போதனை அளிக்கின்றேன்: நான் கற்பிப்பதைப் புறக்கணியாதீர்கள்:
3.     நான் என் தந்தையின் அருமை மைந்தனாய், தாய்க்குச் செல்லப் பிள்ளையாய் வளர்ந்து வந்தேன்.
4.     அப்பொழுது என் தந்தை எனக்குக் கற்பித்தது இதுவே: நான் சொல்வதை உன் நினைவில் வை: என் கட்டளைகளை மறவாதே: நீ வாழ்வடைவாய்.
5.     ஞானத்தையும் மெய்யுணர்வையும் தேடிப் பெறு: நான் சொல்வதை மறந்துவிடாதே: அதற்கு மாறாக நடவாதே:
6.     ஞானத்தை புறக்கணியாதே: அது உன்னைப் பாதுகாக்கும்: அதை அடைவதில் நாட்டங்கொள்: அது உன்னைக் காவல் செய்யும்.
7.     ஞானத்தைத் தேடிப் பெறுவதே ஞானமுள்ள செயல்: உன் சொத்து எல்லாம் கொடுத்தாயினும் மெய்யுணர்வைத் தேடிப் பெறு.
8.     அதை உயர்வாய்க் கொள்: அது உன்னை உயர்த்தும்: அதை நீ தழுவிக்கொள்: அது உன்னை மாண்புறச் செய்யும்.
9.     அது உன் தலையில் மலர் முடியைச் சூட்டும்: மணிமுடி ஒன்றை உனக்கு அளிக்கும்.
10.     பிள்ளாய்! கவனி: நான் சொல்வதை ஏற்றுக்கொள்: அப்பொழுது உன் ஆயுட்காலம் நீடிக்கும்.
11.     ஞானத்தின் வழிகளை உனக்குக் கற்பித்திருக்கின்றேன்: நேரிய பாதைகளில் உன்னை நடத்தி வந்தேன்.
12.     நீ நடக்கும்போது உன் கால் சறுக்காது : நீ ஓடினாலும் இடறி விழமாட்டாய்.
13.     பெற்ற நற்பயிற்சியில் உறுதியாக நிலைத்துநில்: அதை விட்டுவிடாதே: அதைக் கவனமாய்க் காத்துக்கொள்: அதுவே உனக்கு உயிர்.
14.     பொல்லார் செல்லும் பாதையில் செல்லாதே: தீயோர் நடக்கும் வழியில் நடவாதே.
15.     அதன் அருகில் செல்லாதே: அதில் கால்வைக்காதே: அதை விட்டு விலகி உன் வழியே செல்.
16.     தீமை செய்தாலன்றி அவர்களுக்குத் பக்கம் வராது: யாரையாவது கீழே வீழ்த்தினாலன்றி அவர்களுக்கு உறக்கம் வராது
17.     தீவினையே அவர்கள் உண்ணும் உணவு: கொடுஞ் செயலே அவர்கள் பருகும் பானம்.
18.     நேர்மையாளரின் பாதை வைகறை ஒளி போன்றது: அது மேன்மேலும் பெருகி நண்பகலாகின்றது.
19.     பொல்லாரின் பாதையோ காரிருள் போன்றது: தாங்கள் எதில் இடறி விழுவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது
20.     பிள்ளாய்! என் வார்த்தைகளுக்குச் செவிகொடு: நான் சொல்வதைக் கவனி.
21.     என் கவனத்தினின்று அவை விலகாதிருக்கட்டும்: உன் உள்ளத்தில் அவற்றைப் பதித்துவை.
22.     அவற்றைத் தேடிப் பெறுவோருக்கு அவை உயிரளிக்கும்: அவர்களுக்கு உடல் நலமும் தரும்.
23.     விழிப்பாயிருந்து உன் இதயத்தைக் காவல் செய்: ஏனெனில், அதனின்று பிறப்பவை உன் வாழ்க்கையின் போக்கை உறுதிசெய்யும்.
24.     நாணயமற்ற பேச்சு உன் வாயில் வரக்கூடாது: வஞ்சகச் சொல் உன் வாயில் எழக்கூடாது.
25.     உன் கண்கள் நேரே பார்க்கட்டும்: எதிரே இருப்பதில் உன் பார்வையைச் செலுத்து.
26.     நேர்மையான பாதையில் நட: அப்பொழுது, உன் போக்கு இடரற்றதாயிருக்கும்.
27.     வலப்புறமோ இடப்புறமோ திரும்பாதே: தீமையின் பக்கமே காலெடுத்து வைக்காதே.

அதிகாரம் - 5


1.     பிள்ளாய்! என் ஞானத்தில் உன் கவனத்தைச் செலுத்து: என் அறிவுரைக்குச் செவிகொடு.
2.     அப்பொழுது விவேகத்துடன் நடந்துகொள்வாய்: அறிவு உன் நாவைக் காவல்செய்யும்.
3.     விலைமகளின் பேச்சில் தேன் ஒழுகும்: அவள் உதடுகள் வெண்ணெயினும் மிருதுவானவை.
4.     ஆனால் அவள் உறவின் விளைவோ எட்டியினும் கசக்கும்: இருபுறமும் கூரான வால் வெட்டுதலை ஒக்கும்
5.     அவள் கால் சாவை நோக்கிச் செல்லும்: அவள் காலடி பாதாளத்திற்கு இறங்கிச் செல்லும்.
6.     வாழ்வுக்குச் செல்லும் பாதையை அவள் கவனத்தில் கொள்வதில்லை: அவளுடைய வழிகள் மாறிகொண்டே இருக்கும்: அதைப்பற்றி அவளுக்குக் கவலையே இல்லை.
7.     ஆகையால், பிள்ளாய்! எனக்குச் செவிகொடு: நான் சொல்வதற்கேற்ப நடக்க மறவாதே.
8.     அவளிடமிருந்து நெடுந்தொலையில் இருந்துகொள்: அவள் வீட்டு வாயிற்படியை மிதியாதே.
9.     இல்லையேல், பிறர் முன்னிலையில் உன் மானம் பறிபோகும்: கொடியவர் கையில் உன் உயிரை இழப்பாய்.
10.     அன்னியர் உன் சொத்தைத் தின்று கொழுப்பார்கள்: நீ பாடுபட்டுச் சம்பாதித்தது வேறொரு குடும்பத்திற்குப் போய்ச் சேரும்.
11.     நீ எலும்பும் தோலுமாய் உருக்குலைந்து போவாய்: உன் வாழ்க்கையின் இறுதியில் கலங்கிப் புலம்புவாய்.
12.     ஜயோ, அறிவுரையை நான் வெறுத்தேனே! கண்டிக்கப்படுவதைப் புறக்கணித்தேனே!
13.     கற்பித்தவர்களின் சொல்லைக் கேளாமற் போனேனே! போதித்தவர்களுக்குச் செவிகொடாமல் இருந்தேனே!
14.     இப்பொழுது நான் மீளாத் துயரத்தில் மூழ்கியவனாய், மக்கள் மன்றத்தில் மானமிழந்து நிற்கிறேனே என்று அலறுவாய்.
15.     உன் சொந்த நீர்த்தொட்டியிலுள்ள நீரையே குடி: உன் வீட்டுக் கிணற்றிலுள்ள நல்ல தண்ணீரையே பருகு
16.     உன் ஊற்றுநீர் வெளியே பாயவேண்டுமா? உன் வாய்க்காலின் நீர் வீதியில் வழிந்தோடவேண்டுமா?
17.     அவை உனக்கே உரியவையாயிருக்கட்டும்: அன்னியரோடு அவற்றைப் பகிர்ந்துகொள்ளாதே.
18.     உன் நீருற்று ஆசி பெறுவதாக! இளமைப் பருவத்தில் நீ மணந்த பெண்ணோடு மகிழ்ந்திரு.
19.     அவளே உனக்குரிய அழகிய பெண் மான், எழில்மிகு புள்ளிமான்: அவளது மார்பகம் எப்போதும் உனக்கு மகிழ்வூட்டுவதாக! அவளது அன்பு உன்னை எந்நாளும் ஆட்கொண்டிருப்பதாக!
20.     மகனே, விலைமகளைப் பார்த்து நீ மயங்குவதேன்? புரத்தையை நீ அணைத்துக்கொள்வதேன்?
21.     மனிதரின் வழிகளுள் ஒன்றும் ஆண்டவர் கண்களுக்குத் தப்புவதில்லை: அவர்களுடைய பாதைகளையெல்லாம் அவர் சீர்பக்கிப் பார்க்கின்றார்.
22.     பொல்லார் தம் குற்றச் செயல்களில் தாமே சிக்கிக்கொள்வர்: தம் பாவ வலையில் தாமே அகப்பட்டுக்கொள்வர்.
23.     கட்டுப்பாடு இல்லாததால் அவர்கள் மடிந்து போவர்: தம் மதிகேட்டின் மிகுதியால் கெட்டழிவர்.

அதிகாரம் 6. 
 


1.     பிள்ளாய்! உன் அடுத்திருப்பவரின் கடனுக்காக நீ பொறுப்பேற்றிருந்தால், அல்லது அன்னியர் ஒருவருக்காகப் பிணையாய் நின்றால்,
2.     அல்லது உன் வார்த்தைகளை முன்னிட்டு ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டால், அல்லது உன் வாய்ச் சொல்லிலேயே நீ பிடிபட நேரிட்டால்,
3.     பிள்ளாய்! உன்னை விடுவித்துக் கொள்ள இப்படிச் செய்: நீ அடுத்திருப்பவரின் கையில் அகப்பட்டுக் கொண்டதால், விரைந்தோடிச் சென்று அவரை வருந்தி வேண்டிக்கொள்.
4.     அதைச் செய்யும் வரையில் கண்ணயராதே: கண் இமைகளை மூடவிடாதே.
5.     நீ வேடன் கையில் அகப்பட்ட மான் போலிருப்பாய்: கண்ணியில் சிக்கிய குருவிக்கு ஒப்பாவாய்: உன்னைத் தப்புவித்துக் கொள்ளப்பார்.
6.     சோம்பேறிகளே, எறும்பைப் பாருங்கள்: அதன் செயல்களைக் கவனித்து ஞானமுள்ளவராகுங்கள்:
7.     அதற்குத் தலைவனுமில்லை, கண்காணியுமில்லை, அதிகாரியுமில்லை.
8.     எனினும், அது கோடையில் உணவைச் சேர்த்துவைக்கும்: அறுவடைக் காலத்தில் தானியத்தைச் சேகரிக்கும்.
9.     சோம்பேறிகளே, எவ்வளவு நேரம் படுத்திருப்பீர்கள்? பக்கதிலிருந்து எப்போது எழுந்திருப்பீர்கள்?
10.     இன்னும் சிறிது நேரம் பங்குங்கள், இன்னும் சிறிது நேரம் உறங்குங்கள்: கையை முடக்கிக்கொண்டு இன்னும் சிறிது நேரம் படுத்திருங்கள்.
11.     வறுமை உங்கள் மீது வழிப்பறிக் கள்வரைப்போல் பாயும்: ஏழ்மைநிலை உங்களைப் போர்வீரரைப்போல் தாக்கும்.
12.     போக்கிரி அல்லது கயவன் தாறுமாறாகப் பேசிக்கொண்டு அலைவான்.
13.     அவன் கண் சிமிட்டுவான்: காலால் செய்தி தெரிவிப்பான்: விரலால் சைகை காட்டுவான்.
14.     அவன் தன் வஞ்சக உள்ளத்தில் சதித்திட்டம் வகுப்பான்: எங்கும் சண்டை மூட்டிவிடுவான்.
15.     ஆகையால் அவனுக்கு எதிர்பாராத நேரத்தில் கேடு வரும்: தீடீரென்று அழிந்துபோவான்: மீ£ளமாட்டான்.
16.     ஆண்டவர் வெறுக்கும் ஆறு, ஏழாவது ஒன்றும் அவரது வெறுப்புக்கு உரியது.
17.     அவை இறுமாப்புள்ள பார்வை, பொய்யுரைக்கும் நாவு, குற்றமில்லாரைக் கொல்லும் கை,
18.     சதித்திட்டங்களை வகுக்கும் உள்ளம், தீங்கிழைக்க விரைந்தோடும் கால்,
19.     பொய்யுரைக்கும் போலிச்சான்று, நண்பரிடையே சண்டை மூட்டிவிடும் செயல் என்பவையே.
20.     பிள்ளாய்! உன் தந்தையின் கட்டளையைக் கடைப்பிடி: தாயின் அறிவுரையைப் புறக்கணியாதே.
21.     அவற்றை எப்போதும் உன் இதயத்தில் இருத்திவை: உன் கழுத்துக்கு மாலையென அணிந்து கொள்.
22.     நீ நடந்து செல்லும்போது அவை உனக்கு வழிகாட்டும்: நீ படுத்திருக்கும்போது அவை உன்னைக் காவல் காக்கும்: விழித்திருக்கும்போது உன்னுடன் உரையாடும்.
23.     கட்டளை என்பது ஒரு விளக்கு: அறிவுரை என்பது ஒளி: கண்டித்தலும் தண்டித்தலும் நல்வாழ்வுக்கு வழி.
24.     அவை உன்னை விலைமகளிடமிருந்து, தேனொழுகப் பேசும் பரத்தையிடமிருந்து விலகியிருக்கச் செய்யும்.
25.     உன் உள்ளத்தால் அவளது அழகை இச்சியாதே: அவள் கண்ணடித்தால் மயங்கிவிடாதே.
26.     விலைமகளின் விலை ஒரு வேளைச் சோறுதான்: ஆனால், பிறன் மனையாளோ உயிரையே வேட்டையாடி விடுவாள்.
27.     ஒருவன் தன் மடியில் நெருப்பை வைத்திருந்தால், அவனது ஆடை எரிந்துபோகாமலிருக்குமா?
28.     ஒருவன் தழல்மீது நடந்து சென்றால், அவன் கால் வெந்துபோகாமலிருக்குமா?
29.     பிறன்மனை நயப்பவன் செயலும் இத்தகையதே: அவளைத் தொடும் எவனும் தண்டனைக்குத் தப்பமாட்டான்.
30.     திருடன் தன் பசியைத் தீர்க்கத் திருடினால், அவனை மக்கள் பெருங்குற்றவாளியெனக் கருதாதிருக்கலாம்.
31.     ஆனால், அவன் பிடிபடும்போது ஏழு மடங்காகத் திருப்பிக்கொடுக்க வேண்டும்: தன் குடும்பச் சொத்து முழுவதையுமே கொடுத்துவிட நேரிடும்.
32.     கற்புநெறி தவறுகிறவன் மதிகேடன். அவ்வாறு செய்வோன் தன்னையே அழித்துக்கொள்கின்றான்.
33.     அவன் நைய நொறுக்கப்படுவான், பழிக்கப்படுவான்: அவனது இழிவு ஒருபோதும் மறையாது.
34.     ஏனெனில், தன் மனைவி தனக்கே உரியவள் என்னும் உணர்ச்சி ஒரு கணவனிடம் சினவெறியை உண்டாக்கும்: பழி தீர்த்துக்கொள்ள வாய்ப்புக் கிடைக்கும் நாளில், அவன் இரக்கம் காட்டமாட்டான்:
35.     சரியீடு எதுவும் ஏற்றுக் கொள்ளமாட்டான்: எவ்வளவு பொருள் கொடுத்தாலும் அவன் சினம் தணியாது.

                                                                                                                              (தொடரும்)