koonandiyurpanchayat

koonandiyurpanchayat
KOONANDIYUR PANCHAYAT

Friday, August 28, 2015

மீன ராசியில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள்

மீனம் : 




            மீன ராசியை ஜென்ம ராசியாகக்கொண்டு பிறந்தவர்கள் சத்தியம் தவறாதவர்கள். யாருக்கும் தீங்கு எண்ணாதவர்கள். இளமையில் இளைத்த தேகத்துடனும் பின்பு திடகாத்தியமான உடலமைப்பையும் பெறுவார்கள். கல்வியில் அதிக மதிப்பெண்கள் பெறுவர். அனைவரிடமும் மனம் விட்டு வெளிப்படையாக பழகக்கூடியவர்கள்.

             இவர்கள் பின்னால் வருவதனை நினைத்துப் பார்த்து மிகவும் எச்சரிக்கையாக வாழக்கூடியவர்கள். வருங்காலத்திற்கு தேவையானதை இப்போதே செய்து வருவார்கள். விடாமுயற்சியுடன் எந்த ஒரு செயலையும் செய்து முடிப்பார்கள். தாய், தந்தை, சகோதிர சகோதிரிகள் மீது அதிகமான பாசம் வைத்திருப்பார்கள். 

           குரு ராசி அதிபராக வருவதனால் கடவுளின் ஆசியும் உயர்ந்த பதவியும் நல்ல ஞானமும் கிட்டும். உதவி செய்தோரை ஒருபோதும் மறவாத குணம் கொண்டு அனைவருக்கும் நல்லதே செய்யக்கூடிய அமைதியானவர்கள் மீன ராசிக்காரகள்.

          பூரட்டாதி 4 ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மீன ராசிக்காரர்கள் ஆவர்.   

கும்ப ராசியில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள்

கும்பம் : 




                  கும்ப ராசியை ஜென்ம ராசியாகக்கொண்டு பிறந்தவர்கள் கல்வியில் ஊக்கமும் தெய்வ வழிபாடுகளில் நாட்டமும் ஒழுக்கமாகவும் இருப்பார்கள். இவர்கள் சில நேரங்களில் தற்பெருமை கொண்டு பேசக்கூடியவர்களாக இருப்பார். தன்னை அளவுக்கு அதிகமாக நேசிப்பதனால் தற்பெருமை இயல்பாக வரும்.

                 கும்ப ராசிக்காரர்களுக்கு பெண்களின் உதவி ஆதிகம் இருக்கும். சனி ஆள்வதால் கடினமாக உழைக்கும் திறனைப் பெற்றிருப்பார்கள். இவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத்துணை நல்ல அறிவாற்றல் மிக்கவராகவும். சிறந்த குணநலன்களை உடையவர்களாகவும் இருப்பர். 

                புகழ், பெருமை இவர்களை தேடி வரும். பேச்சில் சாமார்த்தியமும் செயலில் ஆழ்ந்த கவனமும் கொண்ட இவர்கள் சிறிது கோவக்காரர்களாகவும் சண்டை இடுதலில் பிரியம் கொண்டவர்களாகவும் திகழ்வர். இடம் பொருள் ஏவல் பார்த்து எதையும் செய்து ஜெயிக்கக்கூடியவர்கள்.

             அவிட்டம் 3, 4 ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 ஆம் பாதங்களில் பிறந்தவர்கள் கும்பராசிக்காரர்கள் ஆவர்.    

மகர ராசியில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள்

மகரம் : 




                  மகர ராசியை ஜென்ம ராசியாகக்கொண்டு பிறந்தவர்கள் நீண்ட உயர்ந்த கம்பீரமான உடல் அமைப்பையும் உடம்பில் மச்சங்களையும் பெற்று காணப்படுவர். படிப்பில் தேர்ச்சியும் கஷ்ட்டப்பட்டு படிப்பவர்கலாகவும் இருப்பர். ஆடை ஆபரணங்களில் பிரியமும் சுத்தம் சுகாதாரத்துடனும் இருக்க விருப்புவர்.

                இவர்கள் பிறந்ததற்கு அடுத்து இவர்களது குடும்பம் செல்வம் செல்வாக்குடன் புகழ் பெற்று வளர தொடங்கி இருக்கும். தன் விருப்பம் போல் வாழக்கூடியவர்களாகவும் மனைவி மக்கள் மீது அதிக பிரியத்துடனும் இருப்பார்கள்.

                  சனி ராசி அதிபதியாக வருவதனால் நீதி நேர்மையை கடைப்பிடித்து வாழ்வார்கள். முதல் 30 ஆண்டுகள் கொஞ்சம் கஷ்ட்டங்கள் இருந்தாலும் பின் வருகாலங்களில் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைவார்கள். குடும்பத்திற்கு இறை அருளும் சந்தோசமும் நிறைந்து இருக்கும்.

              உத்திரட்டாதி 2, 3, 4 ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2, ஆம் பாதங்களில் பிறந்தவர்கள் மகர ராசிக்காரர்கள் ஆவர். 

தனுசு ராசியில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள்

தனுசு : 




                தனுசு ராசியை ஜென்ம ராசியாகக்கொண்டவர்கள் சிறுவயது முதலே பெரியவர்கள் போன்று நடந்துகொள்வர். தத்துவம் பேசுவது பிறருக்கு அறிவுரை புகட்டுவது போன்றவற்றுள் தனுசு ராசிக்காரர்கள் திறமைசாலிகள். நல்ல கல்வியையும் ஒழுக்கத்தையும் பெற்று ஞானி போன்று நடந்துக்கொள்வார்கள்.

             தெய்வீக வழிபாடுகளும் பெரியோரிடத்தில் பக்த்தியும் கொண்ட இவர்கள் கீழோர் மேலோர் எனும் பாகுபாடின்றி பழகக்கூடியவர்கள்.சதா சஞ்சாரம் (அதிக பயணம்) நிறைந்ததாக வாழ்கை இருக்கும். குரு அதிபதியாக வருவதனால் சிறந்த குணநலன்களை பெற்று உயர் பதவியை வகிர்க்கக்கூடியவர்கள். சிறிது காலம் பெரும் சிரமங்களுக்கு ஆட்பட்டு பிறகு வெற்றி காண்பார்கள்.

           மாதா, பிதா, ஆசிரியரை வணங்கக்கூடிய இவர்கள்  செல்வம் செல்வாக்கினை பெற்று வாகன யோகத்துடன் மகிழ்ச்சியாக வாழக்கூடியவர்கள். 

        மூலம், பூராடம், உத்திராடம் 1 ஆம் பாதங்களில் பிறந்தவர்கள் தனுசு ராசியினர் ஆகும்.