koonandiyurpanchayat

koonandiyurpanchayat
KOONANDIYUR PANCHAYAT

Friday, August 28, 2015

கும்ப ராசியில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள்

கும்பம் : 




                  கும்ப ராசியை ஜென்ம ராசியாகக்கொண்டு பிறந்தவர்கள் கல்வியில் ஊக்கமும் தெய்வ வழிபாடுகளில் நாட்டமும் ஒழுக்கமாகவும் இருப்பார்கள். இவர்கள் சில நேரங்களில் தற்பெருமை கொண்டு பேசக்கூடியவர்களாக இருப்பார். தன்னை அளவுக்கு அதிகமாக நேசிப்பதனால் தற்பெருமை இயல்பாக வரும்.

                 கும்ப ராசிக்காரர்களுக்கு பெண்களின் உதவி ஆதிகம் இருக்கும். சனி ஆள்வதால் கடினமாக உழைக்கும் திறனைப் பெற்றிருப்பார்கள். இவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத்துணை நல்ல அறிவாற்றல் மிக்கவராகவும். சிறந்த குணநலன்களை உடையவர்களாகவும் இருப்பர். 

                புகழ், பெருமை இவர்களை தேடி வரும். பேச்சில் சாமார்த்தியமும் செயலில் ஆழ்ந்த கவனமும் கொண்ட இவர்கள் சிறிது கோவக்காரர்களாகவும் சண்டை இடுதலில் பிரியம் கொண்டவர்களாகவும் திகழ்வர். இடம் பொருள் ஏவல் பார்த்து எதையும் செய்து ஜெயிக்கக்கூடியவர்கள்.

             அவிட்டம் 3, 4 ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 ஆம் பாதங்களில் பிறந்தவர்கள் கும்பராசிக்காரர்கள் ஆவர்.    

No comments:

Post a Comment