koonandiyurpanchayat

koonandiyurpanchayat
KOONANDIYUR PANCHAYAT

Sunday, December 27, 2020

ஆசிரியர் சாம்ராஜின் - சூட்கேஸ் / கோர்ட்கேஸ் – சிறுகதை

 சூட்கேஸ் / கோர்ட்கேஸ் – சிறுகதை

   கிழக்கே பார்க்கையில் சூரியன் ஒளி வடிவானது தலை சிறிது தூக்கும் நிலை. அதாவது மணி காலை 10, பத்தரை இருக்கும். கோட்டை போன்ற வீட்டின் கதவு திறக்க எண்ணி அழைப்பு மணி ஒலிக்கும் சப்தம். வேலைக்காரர் கதவைத் திறந்து, வாருங்கள் என சூட்கேசுடன் வந்த இளைஞரை அழைத்து மீண்டும் கதவை தாழ்ப்பாள் போட்டார். இளைஞரைப் பார்த்த வேலைக்காரர் “ஐயா மேலே உள்ளார். மேலே செல்லுங்கள்” என முதல் தளத்திற்கு அனுப்பி வைத்தார். மேலே சொகுசு அறைக்கு உள்ளே அனுமதி பெற்று நுழைந்த இளைஞர் அங்கிருந்த மேசையின் மீது சூட்கேசை வைத்து விட்டு. “ஐயா நான் செல்லலாமா?” என பணிவுடன் கேட்க படுத்துக்கொண்டே புகைத்துக்கொண்டிருந்த தலைவர் “ம் சரி தம்பி கிளம்பு, நாம தான் ஜெயிக்கிறோம் நம்ம கூட்டணிய மிஞ்ச யாரும் இல்ல. உங்க தலைவர தைரியமா இருக்கச் சொல்லு. புரியுதா? என புகை ஊத, இளைஞர் சரிங்கையா என்று வெளியேறுகிறார்.   

     மணிமாறன் ஒரு எழுச்சி மிக்க இளைஞன். தவறுகள் திருத்தப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். மண்ணில் சமத்துவம், சாந்தம் நிலவிட வேண்டும் என்றிருப்பவன். இதனால் தவறு செய்யும் அதிகாரிகள் குறித்தும் தலைவர்கள் குறித்தும் பொது மக்களிடம் விழிப்பூட்டல், உயர் அதிகாரிகளுக்கு மனு கொடுத்தல், ஏழை எளியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்களை பெற்றுக்கொடுத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தான். மணிமாறன் செயல்களால் பல அதிகாரிகள் பணியிட மாற்றம், தற்காலிக பணி நீக்கம், செய்யப்பட்டனர். பல அரசியல் தலைவர்கள் அப்பேரூராட்சி தேர்தலில் தோல்வியை தழுவினர்.  இதனால் பல முக்கிய புள்ளிகளின் அதிருப்திக்கு ஆளாகினான் மணிமாறன்.



     அன்று திங்கள் கிழமை கோவிலில் சாமியை வணங்கிவிட்டு பணி தேடி நேர்காணலுக்குச் செல்ல சான்றிதழ்களுடன் புறப்பட்டான் மணிமாறன். சாலையோரம் ஓரிரு வண்ண நிறம் கொண்ட கட்சிக்கொடிகள் அலங்கரிக்கப்பட்ட லாரி ஒன்று நின்றுந்தது. கோவில் வாசலில் பார்வையற்று பிட்சை எடுத்துக்கொண்டிருந்த மாலதி (வயது 28) உள்பட பல ஏழை எளிய பெண்களும் பெருசுகளும் லாரியில் விறுவிறுப்பாக லாரியில் ஏறினர். லாரியின் ஓட்டுனர் லாரி மீது சாய்ந்து நின்றபடி பீடி புகைத்தபடி, புரியாமல் நடந்து சென்றுகொண்டிருந்த மணிமாறனைப் பார்த்து “என்ன தம்பி எங்க போற? வண்டியில ஏறு?” என அழைக்க மணிமாறன் பறந்து வரும் பீடி புகை காற்றை கையில் தட்டியபடி, “பரவால்ல அண்ண, எனக்கு பக்கத்துல தான் இண்டெர்வியூ. நான் நடந்தே போய்க்கிறேன் தேங்க்ஸ்” என்று கூற, ஓட்டுனர் “அட இண்டர்வ்யூக்கு போனா மட்டும் வேலையா கொடுக்கப்போறான். பணம் கொடுத்தா தான் வேலை அங்க ஏன் போயு டயத்த வேஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்க. வண்டியுல ஏறு பக்கதூர்ல ‘காமா சோமா’ கட்சி மாநாடு நடக்குது. 300 ரூபா, கோட்டறு, பிரியாணி கிடைக்கும். சும்மா உக்காந்து ஒரு ரெண்டு மணி நேரம் கை தட்டிட்டு வந்தா பொது. ஆமா உனக்கு விசில் அடிக்கத் தெரியுமா? என ஓட்டுனர் கேட்க. கோபமடைந்த மணிமாறன் “யோ போயா வேலைய பாத்துகிட்டு” என்று எரிந்தபடு சாலையோரம் விறைத்து நடக்க மணிமாறன் தன் கையில் வைத்திருந்த பைலில் இருந்து தனது ஓட்டுனர் உரிமத்தை கீழே தவறிவிட்டபடி செல்ல. சிறிது நேரம் ஆனவுடன் லாரி ஓட்டுனர் தன் லாரி சீட்டருகே சென்று அமருகையில். சாலையோரம் ஓட்டுனர் உரிமம் ஒன்று கிடப்பதை கண்ணாடி வாயிலாகப் பார்த்து வண்டியிலிருந்து இறங்கிச் சென்று எடுத்துப்பார்க்க அது தன்னுடன் பேசி சென்ற இளைஞனது என்று அறிந்தபடி அவ்வோட்டுனர் உரிமத்தை லாரியின் டிரைவர் சீட்டருகே வைத்தபடி லாரி கிளம்புவது.   

     அரசியல் பிரச்சார கூட்டத்தில் கட்சி தலைவர் “திரளாக இங்கு வந்திருக்கும் உங்களை எல்லாம் பார்க்கும்போது ஒன்று மட்டும் எனக்கு உறுதியாகத் தெரிகிறது. இனி எந்த ஒரு சக்தியாலும் நம் கோட்டையை அசைக்க முடியாது என்பது” என்றபடி ஒரு காலை ஸ்டேஜில் உதைக்க, ஸ்டேஜ் ஒரு அசைவு காட்டியது. உன்னே மைக்கை அனைத்தபடி தலைவர் தன் பின்னமர்ந்து கொண்டிருந்த கட்சி ஆட்களிடம் “டேய் எவன்டா இந்த ஸ்டேஜ போட்டது? டவுன் பஸ் மாதிரி குலுங்குது. முட்டுக்குடுங்கடா மூதேவிகளா” உடனே வேலையார்களால் ஸ்டேஜிக்கு முட்டுகொடுக்கும்பணி நடந்தபடியே தலைவர் பேசிகொண்டிருந்தார்.

     மணி மாலை 4. மாநகராட்சி பேருந்து நுழைவு வாயில் அருகே “ இறைவனிடம் கையேந்துங்கள் -அவன்இல்லையென்று சொல்லுவதில்லை பொறுமையுடன் கேட்டு பாருங்கள் - அவன்
பொக்கிஷத்தை மூடுவதில்லை” என்று பாடியபடி ஒன்றரை வயது குழந்தையை ஒரு கையிலும் ஊன்றுகோல் மற்றும் உண்டியல் ஒரு கையிலும் தாங்கியபடி மாலதியின் கணவன் மாணிக்கம் பிட்சையேந்தி நின்றான்.

     மாநாட்டில் தலைவர் விறுவிறுப்பாக பேசிக்கொண்டிருந்த வேளை. மாலதி கூட்டத்தில் எழுந்தபடி “ஐயா 2 மணி நேரம்தான்னு கூட்டிகிட்டு வந்திங்க மூனரை மணி நேரம் ஆகிடுச்சி, என் கொழந்த அங்க பாலுக்கு அழுதுகிட்டு இருக்கும். தயவு செஞ்சு பணத்த கொடுங்க நான் பஸ் எறியாட்சம் போய்டுறேன்” என கூவ, பின்வரிசையில் இருந்த முரட்டு முட்டாள் இளைஞன் ஒருவன் “அட உக்காரும்மா வீடியோ எடுதுகிட்டிருக்கேன். மறைக்காத உக்காரு உக்காரு” என் தன் செல் போனில் கல்கி அவதாரத்தை கண்டவாறு தீவிரமாக கூட்டத்தையும் தலைவர்களையும் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தான். மாலை பள்ளி விட்ட வேளை. கூட்டத்தை அருகாமையில் சில பள்ளி மாணவ மாணவிகளும் சிறிதுநேரம் வேடிக்கை பார்க்க நின்றனர். பார்வையற்ற மாலதியை பார்த்த 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் மாலதியை கூட்டத்திலிருந்து அழைத்து வந்து, தன் ஜாமண்ட்ரி பாக்ஸில் இருந்த 15 ரூபாயை மாலதியிடம் கொடுத்து மாலதியை பத்திரமாக பஸ்ஸில் ஏற்றிவிட்டாள்.    


     இரண்டு மாதங்கள் கழிந்தன. நாளிதழில் ஒன்றில் “பார்வையற்ற தம்பதியினர் மாணிக்கம் – மாலதி ஆகியோரது கைக்குழந்தையை கடத்தி குழந்தையில்லா தம்பதியினருக்கு விற்ற குற்றத்திற்காக மணிமாறன் எனும் பட்டதாரி இளைஞரை கைது செய்து வழக்கு தொடரப்பட்டுள்ளது” என்ற செய்தியைப் படித்த அதிகாரி ஒருவர் “ஏன்டா டேய் நீ இம்மாந்துண்டு பையன் என் வேலைக்கே வேட்டுகைக்குற. உன்ன ஒழிச்சிடுறேன்டா” என்றபடி நாளிதழை டீக்கடை பெஞ்சில் போட்டபடி தன் பாக்கெட்டில் இருந்த மணிமாறன் ஓட்டுனர் உரிமத்தை உடைத்து அருகில் ஓடிய சாக்கடையில் போடுவது. அந்நேரம் அருகே இருந்த கோவில் மணி ஒலித்தது..   

                *******************************************************

நன்றி அன்புடன் சாம்ராஜ்.

Saturday, October 31, 2020

விறகடுப்பு - சிறுகதை (ஆசிரியர் சாம்ராஜ்)

 விறகடுப்பு - சிறுகதை:

மாலை 6 மணி வேளை, தேவகி விறகடுப்பில் பாத்திரத்தை வைத்துவிட்டு எதையோ தீவீரமாக தேடிக்கொண்டிருந்தாள். அருகாமையில் உள்ள வயக்காட்டில் தேவகியின் 4 வயது மகனான கபிலனும் நாய் குட்டியும் ஓடித்திறிந்தனர். கபிலனி சட்டை பாக்கெட்டில் இருந்த கைப்பேசி ஒலிக்க கபிலன் அதனை எடுத்து 'ஹலோ அப்பாவா? அப்பா தீபாவளிக்கு எனக்கு நிறைய பட்டாசு, ஓரியோ பிஸ்கட்டு எல்லாம் வாங்கிட்டு வா. இல்லனா நான் உன்கூட பேசவே மாட்டேன்' என பேசிக்கொண்டிருக்கும் போது தேவகி வந்து 'டே கபிலா, இங்க குடுடா அந்த நெருப்பு பெட்டியை (தீப்பெட்டி) நான் எங்கெல்லாம் தேடுறது. அடுப்பு பற்ற வைக்கணும்' என்றபடி கபிலன் காதில் வைத்து பேசிக்கொண்டிருந்த தீப்பெட்டியை பிடுங்கிச்செல்ல, கபிலன் கைபேசியாக கற்பனை செய்து வைத்திருந்த தீப்பெட்டியை அம்மாவிடம் கொடுத்துவிட்டு தன் காலில் பின்னித்திறிந்த நாய்க்குட்டியுடன் பேசத் தொடங்கினான்.

 

திருப்பூர் மாவட்டத்தின் பெரிய வட்டம் தாராபுரம் வட்டம். தாராபுரம் அருகே உள்ள பசுமை நிறைந்த கிராமத்தில் உள்ள வயக்காடு ஒன்றில் இரவு 7.30 மணி அளவில் ஒரு இருசக்கர வாகனம் தனியாக நின்றிருந்தது. அருகே புல்வெளியில் அமர்ந்தபடி ராமனும் வனிதாவும் பேசிக்கொண்டிந்தனர். வானத்தில் தோன்றிய தேய்பிறை சந்திரனைப் பார்த்த வனிதா “இன்னும் 4 தினங்களுக்குப் பிறகு வரும் 3 நாட்கள் நாம் இரவில் சந்திக்க முடியாது.” என்று கூற நிலவைப் பார்த்த ராமன் “ஏன் அமாவாசை இருட்டென்றால் உனக்கு அவ்வளவு பயமா?” என்று கேட்க, வனிதா “இருட்டு பயம் அல்ல பிரிவு கவலை. அமாவாசை அன்று தீபாவளி. அன்று நீங்கள் உங்கள் வீட்டிற்கு சென்றுவிடுவீர்கள்.” என வனிதா முகத்தில் ஒரு வாட்டம் தெரிய வனிதாவிற்கு ஒரு போன் அழைப்பு வருவது. போனில் வனிதாவின் மூத்த மகளான நித்யாவும் (10 வயது) இளைய மகள் ஸ்ரீஜாவும் (வயது 8) ஓபன் ஸ்பீக்கரில் தீபாவளி புத்தாடை வாங்கிவிட்டாயா என கேட்பது. வனிதா குழந்தைகளுக்கு புத்தாடை வாங்கிவிட்டதைக் கூறிவிட்டு போனை வைப்பது.

 

இரவு 8 மணி. நித்யாவிற்கும் ஸ்ரீஜாவிற்கும் தீபாவளி நோன்பு குறித்து பாட்டி விவரிப்பது “நம்ம ஊர்ல அந்த காலத்துல இருந்தே தீபாவளி மற்றும் அமாவாசை நோன்பு கொண்டாடப்பட்டு வருகின்றது. குடும்ப பெண்கள் அதிகாலையிலேயே வீட்டை சுத்தம் செய்து குளித்து முடித்து விரதத்தை தொடங்குவார்கள். மாலையில் அதிரசம் தயார் செய்து அருகில் உள்ள கோவிலுக்கு சென்று சாமிக்குப் படைத்து வழிபடுவார்கள். அதன் பின் வீட்டில் சாமிக்கு படையலிட்டு விரதத்தை முடிப்பார்கள். அது வரை உணவு எதுவும் சாப்பிட மாட்டார்கள். மேலும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அசைவம் சாப்பிட மாட்டார்கள். சாமிக்கு படையலிட அதிரசம் தயார் செய்வதற்கு என்று புதிய விறகு அடுப்பு, சட்டி, பானை என அனைத்தும் புதிதாகவே பயன்படுத்துவார்கள்.    இப்படி விரதம் இருந்தால் குடும்பத்திற்கு சகல நன்மைகளும் கிடைக்கும்” என பாட்டி சொல்லி முடித்தாள் பாட்டி நோன்பு விவரம் கூறத் தொடங்கிய சிறிது நேரத்தில் ஸ்ரீஜா தூங்கிவிட்டாள். நித்யாவோ தன் கையில் இருந்த செல்போனில் ஏதோ தடவிகொண்டிருந்தாள்.

குளிரில் கிழிந்த கம்பளியை தன் உடம்பில் போத்தியபடி குடிசை வீட்டு கூரை ஓட்டை வழியே நிலவைப் பார்த்துக் கொண்டிருந்த கபிலன் திடீர் என எழுந்து வீட்டிற்கு வெளியே வந்து வானத்தைப்பார்த்து தன் அமாவிடம் நிலவு எங்கே என்று கேட்டான். தேவகி, “நிலவை மேகம் மூடிக்கொண்டது. கொஞ்ச நேரம் ஆனதும் நிலவு மீண்டும் தெரியும். நீ படுத்து தூங்கு” என்று சொல்லியபடி பாத்திரங்களை கழுவிக்கொண்டிருந்தாள். நிலாவை தேடியபடி ஆவலுடன் இருந்த கபிலனுக்கு சிறிது நேரத்தில் கருமேகம் விலகி நிலா தெரிந்தது. கபிலன் மகிழ்ச்சியுடன் உள்ளே சென்று உறங்கினான்.

 

இன்று தீபாவளி ஊர் தெருவெங்கும் விழாக்கோலம் கபிலன் வழித்தடத்தில் வைத்தக்கண் மாறாமல் தன் தந்தை இன்றாவது  வருவார். என ஆவலுடன் பார்த்துகொண்டிருக்க. உடுமலைப்பேட்டை தங்கும் விடுதி ஒன்றில் இனிமையான பாடல் ஒன்று ஒளித்துக்கொண்டிருக்க ராமனும் வனிதாவும் இணைந்து மது அருந்தியபடி ரசித்திருந்தனர்.

 

மனைவி தேவகி மகன் கபிலனை விட்டு பிரிந்து கணவனை இழந்த வனிதாவினால் ஈர்க்கப்பட்டு ஊரைவிட்டுச்சென்ற இராமன் இனி வரமாட்டான் என்பதை நன்கு அறிந்த தேவகி ரேசன் அரிசியை கொண்டு தோசை சமைத்துக்கொண்டிருக்க. ஊர் எங்கும் பட்டாசு வண்ணமாக இருந்தது. சோகமாக அம்மா அருகில் சென்று அமர்ந்த கபிலன், விறகடுப்பு திட்டில் இருந்த தீப்பெட்டியை எடுத்து திறந்து பார்த்தான். அதில் மொத்தம் 12 தீக்குச்சிகள் இருந்தன. அதிலுள்ள 12 தீக்குச்சிகளையும் ஒவ்வொன்றாக எடுத்து தீப்பெட்டியில் உறசி பற்ற வைத்து அதில் வெளிவந்த நெருப்பை பார்த்து கையில் மத்தாப்பு போன்று சுத்தியபடு பூமிக்கும் வானுக்கும் குதித்து சிரித்து மகிழ்ந்தான். கபிலனில் முகத்தில் சந்தோசத்தைப் பார்த்த தேவகி கண்களில் வடிந்த கண்ணீர் தோசை மாவில் விழ. உப்பு பஞ்சம் தீர்ந்து தொசை உப்பு சுவையுடன் விறகடுப்பில் சமைந்தது.  

*************************************************************************************************   

Thursday, April 9, 2020

கூனாண்டியூர் "கொரோனா வைரஸ் பாதுகாப்பு கருதி மருந்தடிக்கும் பணி"

கொரோனா வைரஸ் :

        உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக அனைத்து ஊர்களிலும் கிருமி நாசினி மருந்து அடிக்கப்பட்டு வருகிறார்கள்.

கூனான்டியூர் பஞ்சாயத்து

         அரசு உத்தரவினை தொடர்ந்து மேச்சேரி ஒன்றியம் கூனான்டியூர் பஞ்சாயத்து தலைவர் திருமதி. விஜயா ராஜாகண்ணு அவர்களின். ஆணைக்கினங்க கூனான்டியூர் பஞ்சாயத்து முழுவதும் கிருமி நாசினி மருந்து அடிக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது. 


வார்டு உறப்பினர்கள் :

                கூனான்டியூர் பஞ்சாயத்து உபத் தலைவர் திருமதி. V. சத்யா  மற்றும்  வார்டு உறுப்பனர்கள் திரு. மாது, திரு. சாம்பசிவம், திருமதி. கோமதி உள்ளிட்ட 9 வார்டு உறுப்பினர்கள் ஒத்துழைப்போடு  கூனான்டியூர் பஞ்சாயத்து முழுவதும் கிருமி நாசினி மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது.



              இதில் முன்னாள் கூனான்டியூர் பஞ்சாயத்து  தலைவரும் தற்போதைய கூனான்டியூர் பஞ்சாயத்து தலைவர் திருமதி. விஜயா ராஜா கண்ணு அவர்களின் கணவருமாகிய திரு. ராஜா கண்ணு அவர்கள் மற்றும் கூனான்டியூர் பஞ்சாயத்து செயலாளர் திரு. விஜயகுமார் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 ஊர் சமூக சேவகர்கள் :



              மேலும்  கூனான்டியூர் பஞ்சாயத்து துப்புரவு பணியாளர்களுடன்  ஊர் சமூக சேவகர்கள் திரு. பிரகாஷ், திரு. செல்வராஜ், திரு. குமார், திரு. கோவிந்தன், திரு. வினுச்சக்கரவர்த்தி மற்றும் திரைப்பட இயக்குனர் திரு. சாம்ராஜ் ஆகியோரும் கிருமி நாசினி மருந்து அடிக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.

Saturday, April 4, 2020

கொரோனா - தடுப்புமுறை பிரச்சாரம்

கொரோனா:


          கொரோனா என்னும் வைரஸ் மனித உடலுக்குள் சென்று பேரழிவை ஏற்படுத்தக் கூடிய ஓர் கொடிய உயிர்கொல்லி நோய் என கூறப்படுகிறது. இது மிகவும் ஆபத்தான நோய்க்கிருமி என்பதனால் இதனைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

144 தடை :

     இந்நோய் ஒருவர் மூலம் மற்றொரு வருக்கு பரவும் தனமை உடையது என்பதனால் அரசு பல தடுப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதுடன் மருத்துவ உதவிகளையும் விரைந்து செய்து வருகிறது. அத்துடன் 144 தடை உத்தரவையும் பிறப்பித்துள்ளது.

கூனான்டியூர் பஞ்சாயத்து :


      அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கை க்காக 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் இந்நோய் குறித்த விழிப்புணர்வு குரல் ஒலி மற்றும் துண்டு சீட்டு பிரச்சாரம் மேற்கொள்ள உத்தரவிட்டத்தின் பேரில் கூனான்டியூர் பஞ்சாயத்து தலைவர் திருமதி. A. விஜயா ராஜாகண்ணு அவர்கள் இன்று (05.04.2020) காலை கொரோனா விழிப்புணர்வு குரல் ஒலி மற்றும் துண்டு சீட்டு பிரச்சாரம் ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.

தலைவர் உரை:

       "கொரோனா என்னும் கொடிய நோய்க்கிருமிக்கு உகந்த மருத்துவ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இனி இந்நோய் வராமல் தடுக்கும் நடவடிக்கையில் அரசு செயல்பட்டு வருகின்றது.   எனவே உலக மக்கள் அனைவரும் அரசுக்கு உரிய ஒத்துழைப்பு தந்துதவும் வகையில் நம் கூனான்டீயூர் ஊராட்சி மக்களுக்கும் தக்க ஒத்துழைப்பு தந்து இக்கொடிய நோய்க்கிருமியை அழித்து வாழ்வில் வளம் பெற கூனான்டியூர் ஊராட்சிக்கு உட்பட்ட என் மக்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்." 
                என்று தலைவர் திருமதி A. விஜயா ராஜாகண்ணு அவர்கள் கூறினார்.

Sunday, March 29, 2020

தொற்று நோய் தடுப்பு முன்னேற்பாடுகள் - கூனான்டியூர் ஊராட்சி

கொரோனா நோய்க்கிருமி:

 
                            இத்தீநுண்மிகள் மனிதர்களுக்கு சுவாச நோயினை ஏற்படுத்தும் ஆற்றல் மிகுந்தவை ஆகும். இவை  பெரும்பாலும் மிதமானவையாகவும் சில நேரங்களில் ஆபத்தானவையாகவும் இருக்கும் என மருத்துவர்களால் கூறப்படுகிறது.


தடுப்பு நடவடிக்கை
:

        இந்நோய் தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 24 மாலை ஆறு மணி முதல் ஏப்ரல் ஒன்றாம் தேதி காலை ஆறு மணிவரை 144 தடை உத்தரவு அமலில் இருக்குமென மாநில அரசு அறிவித்துள்ளது.

கூனான்டியூர் ஊராட்சி:


         இது குறித்து கூனான்டியூர் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி. A. விஜயா ராஜாகண்ணு அவர்கள் ஊராட்சி மக்கள் நலன் கருதியும் அரசிற்கு ஒத்துழைப்பு நல்கும் வகையிலும் உடனடி அறிக்கை ஒன்று வெளியிட்டார். 

அறிக்கை :

       கூனான்டியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளாகிய கூனான்டியூர், கீரைக்காரணூர், பூனகுண்டு காடு, சாமக்கல் காடு, மூர்த்திக்காடு, கொண்டிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் காவிரி ஆறு பாய்கின்றது. மேற்கண்ட பகுதியில் அரசிற்கு சொந்தமான வனத்துறை காடுகள் நிரம்பியுள்ளதால் வெளியூர் நபர்கள் பொழுது போக்கு குளியல் மற்றும் மீன் பிடித்தல் போன்ற பலகாரணங்கள் கருதி தினமும் பல ஊர்களைச் சேர்ந்த மக்கள் கூனான்டியூர் ஊராட்சிக்கு வந்து சென்ற வண்ணம் இருக்கின்றனர். 
           தொற்று நோயின் பாதிப்பு கருதியும் கூனான்டியூர் ஊராட்சி மக்கள் நலன் கருதியும் அரசு அறிவித்த 144 தடை உத்தரவை ஏற்று மேற்கண்ட வெளியாட்கள் குறிப்பிட்ட காலம் வரை கூனான்டியூர் ஊராட்சி எல்லைக்குள் நுழைய தடை செய்யப்பட்டுள்ளனர்.
             அவ்வாறே கூனான்டியூர் ஊராட்சிக்கு உட்பட்ட மக்கள் 144 விதியின் நிபந்தனைகளுக்கு உட்பட்ட மருத்துவம், கல்வி, வங்கி, அத்தியாவசிய தேவை தவிர பிற இதர காரணங்கள் கருதி ஊராட்சிக்கு வெளியே செல்லக்கூடாது என்றும் அரசு கூறிய தடை உத்தரவு முடிவுற்ற பிறகு தத்தம் இயல்பு வாழ்க்கையை கடைபிடிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. இம்முடிவு முழுதும் மக்கள் நலனுக்கே.
  
        இவ்வாறு தலைவர் திருமதி. A. விஜயா ராஜாகண்ணு அவர்கள் கூறியுள்ளார்.


Tuesday, February 18, 2020

குப்பை பெறுக்குபவர் (Sweeper) சம்பளத்தை வழங்கச் செய்த ஊராட்சி மன்றத் தலைவர்

கூனான்டியூர் ஊராட்சி - கீரைக்காரனூர்:


       கூனான்டியூர் ஊராட்சிக்கு உட்பட்ட கீரைக்காரனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் செல்லம்மாள் பரமசிவம் என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக குப்பை பெறுக்குபவர் (Sweeper) பணியை மேற்கொண்டு வருகிறார்.

           இந்நிலையில் அவருக்கு கடந்த 10 மாதங்களாக சம்பளம் வழங்காதது குறித்து தற்போது பதவியேற்ற நம் தலைவர் திருமதி. A. விஜயா ராஜாகண்ணு அவர்கள் கவனத்திற்கு வந்தது.

சம்பளம் கிடைக்க உடனடி ஏற்பாடு :


       அதனைத் தொடந்து தலைவர் திருமதி. விஜயா ராஜாகண்ணு பாதிக்கப்பட்ட செல்லம்மாள் பரமசிவதிற்கு இருமாத சம்பளத்தை வழங்கி மேலும் வழங்கப்படாத மாதங்களுக்குரிய சம்பளத்தை உடனடியாக வழங்க உத்தரவிட்டார். 

செல்லம்மாள் பரமசிவம் :

      இது குறித்து செல்லம்மாள் பரமசிவம் கூறுகையில் "குழந்தைகள் இன்றி ஆதரவற்ற மிகவும் ஏழ்மையில் இருக்கும் எங்களுக்கு கடந்த 10 மாதங்களாக வராமலிருந்த சம்பள பாக்கி கிடைக்க உதவிய தலைவர் அம்மா அவர்களுக்கு மிகவும் நன்றி. மேலும் குடியிருக்க வீடும் இல்லா எங்களுக்கு விரைவில் வீடு வழங்குவார் என்று நம்புகிறோம்" என்று மகிழ்ச்சியாகக் கூறினார்.

Saturday, February 8, 2020

ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர்

மேச்சேரி ஒன்றியம் : 

          சேலம் மாவட்டம் மேச்சேரி ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சாயத்துகள் 17 ஆகும். இப்பஞ்சாயத்துக்களுக்கான கூட்டமைப்புத் தேர்தல் நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் தலைவராக திருமதி. விஜயா ராஜாகண்ணு தேர்ந்தெடுக்கப்பட்டார். 

ஜனவரி 26 கிராம சபைக் கூட்டம்

கிராம சபைக் கூட்டம் : 

        
  குடியரசு தின விழாவை முன்னிட்டு, அனைத்து ஊராட்சிகளிலும் 26.01.2020 அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. அதனடிப்படையில் சேலம் மாவட்டம் மேச்சேரி ஒன்றியம் கூனாண்டியூர் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி . A. விஜயா ராஜாகண்ணு தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. 

தீர்மானங்கள் நிறைவேற்றம் : 
       


            இக்கூட்டத்தில் திருமதி விஜயா ராஜாகண்ணு (கூனாண்டியூர் ஊராட்சி மன்றத் தலைவர் & கிராம சபைக்கூட்டத்தின் தலைவர்), ஒன்றிய அலுவலர்கள், ஊராட்சி அலுவலர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொள்ள, நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் திறலாகக் கலந்து கொண்டனர்.

         இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற வளர்ச்சி குறித்து மக்களிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு பல எண்ணற்ற நல்ல தீர்மானங்கள் மக்கள் முன்னிலையில் நிறைவேற்றப்பட்டது.

மனுக்கள் :




                  கூட்டத்தின் நிறைவாக ஊராட்சிக்கு உட்பட்ட மக்களது தேவைகள் குறித்து மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது. மனுக்களை பெற்ற கிராம சபைக் கூட்டத்தின் தலைவர் திருமதி விஜயா ராஜாகண்ணு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு குறைகள் தீர்க்கப்படும் என்று கூறினார். 

     

Friday, January 17, 2020

சனிப்பெயர்ச்சி 2020

சனிப்பெயர்ச்சி 2020




             சனிப் பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கத்தின் படி வரும் விகாரி வருடம் தை 10ம் தேதி அதாவது 2020 ஜனவரி 24ஆம் தேதி நடக்க உள்ளது. இச்சனிப் பெயர்ச்சியில் சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகரம் ராசிக்கு பெயர்ச்சி ஆகப்போகிறார். ("சரி அதுக்கு என்ன இப்போ ?" என்று குதர்க்கமாக கேலி செய்பவர்கள் இப்பதிவை  படிக்க வேண்டாம் உடனடியாக வெளியேறுங்கள். )

நீதிமான் & ஈஸ்வர பட்டம்:

         இப்பிரபஞ்சத்தில் உயர்ந்த குணங்களாகிய நீதி, நேர்மை, சத்தியம், தர்மம், கடின உழைப்பு போன்றவற்றுக்கு உரியவர் சனி பகவான் ஆவார். 9 நவகிரகங்களில் சனி பகவானுக்கே ஈஸ்வரர் பட்டம் உண்டு (சனீஸ்வரர்).  கிரகங்களில் சனியின் பார்வைக்கு அதிகமான வலிமை உண்டு. அதனால் தான் சனி, பார்த்த மாத்திரத்திலேயே பிடித்துக் கொள்ளும் தன்மை கொண்ட கிரகமாகத் திகழ்கின்றது. பொதுவாகச் சனியின் சன்னிதியில் நின்று வழிபடும் பொழுது, நேருக்கு நேர் நின்று வழிபடுவதைக் காட்டிலும் ஏதேனும் ஒரு பக்க ஓரத்தில் நின்று வழிபட வேண்டும். (சனியின் நட்ஷத்திரக்காரர்களாகிய பூசம், அனு‌ஷம், உத்திரட்டாதி ஆகியோர் மட்டும் சனி பகவானை நேருக்கு நேர் நின்று வழிபடலாம்).

சனியை சாய்வாய் நின்று வழிபடு:

          முன்னோர்கள் சனியை சாய்வாய் நின்று வழிபடு எனச் சொல்லி வைத்திருக்கிறார்கள். அந்த முறையில் சனியை வழிபட்டு சந்தோஷத்தை வரவழைத்துக் கொள்ளலாம். சகல தோஷங்களும் நீங்கி தரணியிலேயே வாழ்க்கை நடத்தச் சனிபகவான் நமக்கு அருள் புரிவார். கர்ம தர்ம ஜீவன ஆயுள் காரராகிய சனீஸ்வர பகவான் நல்லவர்க்கு நல்லவர் கெட்டவருக்கு கெட்டவர் (இது ரஜினி வசனம் ஆச்சே னு கேலி செய்யக்கூடாது, காரணம் சனி பொல்லாதவர்).


கர்மவினை :

       ஒருவர் பூர்வ புனர் (போன ஜென்மம், இறந்தகாலம்) காலங்களில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்றார் போல், நன்மையையும் தீமையும் கலந்து பலனளிப்பார். சனி நீதிபதி. நடுநிலைமையான உண்மையான தலைவர்கள் (பஞ்சாயத்து தலைவர், முதல்வர், பிரதமர்) மற்றும் நீதிமன்ற நீதிபதிகள் அனைவருமே சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களே ஆவர். ஜோதிடம் ஓர் அறிவியல் மூடநம்பிக்கை அல்ல என்பதற்கு தலைவர்களும் நீதிபதிகளும் உதாரணம். இதனை இல்லை என நிரூபிப்பவர்களுக்கு ரூ. 1 கோடி பரிசு வழங்கப்படும்.
          அடுத்த பதிவில் 12 ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள் பற்றி பார்ப்போம்.
            நன்றி.
     அன்புடன் சாம்ராஜ்.

                                                      ****************************
இதனையும் படிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த வார பார்வையாளர்கள் :


Entry
Pageviews
India
13853
United States
2317
Sri Lanka
403
United Arab Emirates
286
Unknown Region
250
Singapore
177
Malaysia
134
United Kingdom
72
Australia
56
Indonesia
Sep 3, 2015, 5 comments
6564
Dec 14, 2015
1593
Sep 2, 2015
898
Sep 28, 2015
861
Aug 29, 2017, 1 comment
471
Oct 3, 2017
389
Nov 17, 2015
361
Aug 27, 2015, 1 comment
291
Aug 29, 2015
219
Sep 18, 2015
215

Jan 13, 2020
                  194

Pageviews by Browsers
Entry
Pageviews
Chrome
13074 (71%)
UCBrowser
2247 (12%)
Firefox
1162 (6%)
Opera
762 (4%)
SamsungBrowser
395 (2%)
Safari
349 (1%)
Mobile Safari
239 (1%)
Internet Explorer
90 (<1%)
OS;FBSV
50 (<1%)
Mobile
33 (<1%)
Pageviews by Operating Systems
Entry
Pageviews
Android
14387 (82%)
Windows
2182 (12%)
iPhone
424 (2%)
Linux
237 (1%)
Mobile
92 (<1%)
iPad
64 (<1%)
Unix
42 (<1%)
Macintosh
39 (<1%)
Android 7.1.1
29 (<1%)
Nokia
19 (<1%)

            மேற்கண்ட என் உலகத்தமிழர்களுக்கு எனது நன்றிகள் கோடி. "இறைவன் உன் இதயத்தில் இருப்பதனால் உனக்கும் உன்னால் நேசிக்கப்படுபவர்களுக்கும் ஒரு துன்பமும் வராது.  ... தொடரும்.