koonandiyurpanchayat

koonandiyurpanchayat
KOONANDIYUR PANCHAYAT

Monday, September 26, 2022

விழியிலே மலர்ந்தது - சிறுகதை பகுதி 1, ஆசிரியர் சாம்ராஜ்

வாமனன் தன் காதலி சனாவிடம் வரும் ஐப்பசி 26 ஆம் தேதி நம் திருமணம் நடக்கும். அதற்கு தேவையான முழு முயற்சியில் தான் ஈடுபட்டு வருவதாக கூறிவிட்டு பைக்கில் நாமக்கல் புதுச்சத்திரத்திலிருந்து சேலம் சீலநாயக்கன்பட்டி வந்துகொண்டிருந்தான். வாமனன் வரும் வழியில் ஆண்டகலூர் கேட் அருகே விபத்தில் பார்வை பறிபோன விமல்ராஜ் நின்றுகொண்டிருந்ததை பார்த்த வாமனன் தன் பைக்கை நிறுத்தி விமல்ராஜை தன் பைக்கில் ஏற்றிக்கொண்டார்.

விரைவாக பைக் சென்றது. சர்வீஸ் ரோட்டில் பேசிக்கொண்டே வண்டியை ஓட்டிவந்த வாமனன் பைக் மீது கணப்பொழுதில் கார் ஒன்று மோதியது.

சேலம் விநாயகா மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர் மாரிமுத்து வாமனன் மற்றும் விமலுக்கு சிகிச்சை முடித்து வெளியே வந்தார். விமல் மற்றும் வாமனன் பெற்றோர் உறவினர் நண்பர்களிடம் ஒரு மகிழ்ச்சியான செய்தியை சொன்னார் "ஏற்பட்ட விபத்தில் தலையில் அடிபட்ட பார்வையற்ற விமலுக்கு இப்போது இந்த விபத்தின் மூலம் பார்வை வந்துவிட்டது" என்றார். விமல் சார்ந்தவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக இச்செய்தி இருந்தது. அடுத்த செய்தியாக "விபத்தில் வாகனம் ஓட்டிய வாமனனுக்கு தலையில் பலத்த அடி ஏற்பட்டதால் வாமனன் தன் பார்வை திறனை இழந்துவிட்டார்." இதை கேட்ட விமல் பெற்றோர் மற்றும் காதலி சனா ஆகியோர் அதிர்ச்சி அடைய, அவசர சிகிச்சை பிரிவில் இருந்த விமல் தனக்கு உதவி செய்து பார்வை பறிபோன வாமனனுக்கு ஒரு அளப்பரிய உதவி செய்ய எண்ணினான்..... தொடரும்........

No comments:

Post a Comment