koonandiyurpanchayat

koonandiyurpanchayat
KOONANDIYUR PANCHAYAT

Friday, January 17, 2020

சனிப்பெயர்ச்சி 2020

சனிப்பெயர்ச்சி 2020




             சனிப் பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கத்தின் படி வரும் விகாரி வருடம் தை 10ம் தேதி அதாவது 2020 ஜனவரி 24ஆம் தேதி நடக்க உள்ளது. இச்சனிப் பெயர்ச்சியில் சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகரம் ராசிக்கு பெயர்ச்சி ஆகப்போகிறார். ("சரி அதுக்கு என்ன இப்போ ?" என்று குதர்க்கமாக கேலி செய்பவர்கள் இப்பதிவை  படிக்க வேண்டாம் உடனடியாக வெளியேறுங்கள். )

நீதிமான் & ஈஸ்வர பட்டம்:

         இப்பிரபஞ்சத்தில் உயர்ந்த குணங்களாகிய நீதி, நேர்மை, சத்தியம், தர்மம், கடின உழைப்பு போன்றவற்றுக்கு உரியவர் சனி பகவான் ஆவார். 9 நவகிரகங்களில் சனி பகவானுக்கே ஈஸ்வரர் பட்டம் உண்டு (சனீஸ்வரர்).  கிரகங்களில் சனியின் பார்வைக்கு அதிகமான வலிமை உண்டு. அதனால் தான் சனி, பார்த்த மாத்திரத்திலேயே பிடித்துக் கொள்ளும் தன்மை கொண்ட கிரகமாகத் திகழ்கின்றது. பொதுவாகச் சனியின் சன்னிதியில் நின்று வழிபடும் பொழுது, நேருக்கு நேர் நின்று வழிபடுவதைக் காட்டிலும் ஏதேனும் ஒரு பக்க ஓரத்தில் நின்று வழிபட வேண்டும். (சனியின் நட்ஷத்திரக்காரர்களாகிய பூசம், அனு‌ஷம், உத்திரட்டாதி ஆகியோர் மட்டும் சனி பகவானை நேருக்கு நேர் நின்று வழிபடலாம்).

சனியை சாய்வாய் நின்று வழிபடு:

          முன்னோர்கள் சனியை சாய்வாய் நின்று வழிபடு எனச் சொல்லி வைத்திருக்கிறார்கள். அந்த முறையில் சனியை வழிபட்டு சந்தோஷத்தை வரவழைத்துக் கொள்ளலாம். சகல தோஷங்களும் நீங்கி தரணியிலேயே வாழ்க்கை நடத்தச் சனிபகவான் நமக்கு அருள் புரிவார். கர்ம தர்ம ஜீவன ஆயுள் காரராகிய சனீஸ்வர பகவான் நல்லவர்க்கு நல்லவர் கெட்டவருக்கு கெட்டவர் (இது ரஜினி வசனம் ஆச்சே னு கேலி செய்யக்கூடாது, காரணம் சனி பொல்லாதவர்).


கர்மவினை :

       ஒருவர் பூர்வ புனர் (போன ஜென்மம், இறந்தகாலம்) காலங்களில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்றார் போல், நன்மையையும் தீமையும் கலந்து பலனளிப்பார். சனி நீதிபதி. நடுநிலைமையான உண்மையான தலைவர்கள் (பஞ்சாயத்து தலைவர், முதல்வர், பிரதமர்) மற்றும் நீதிமன்ற நீதிபதிகள் அனைவருமே சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களே ஆவர். ஜோதிடம் ஓர் அறிவியல் மூடநம்பிக்கை அல்ல என்பதற்கு தலைவர்களும் நீதிபதிகளும் உதாரணம். இதனை இல்லை என நிரூபிப்பவர்களுக்கு ரூ. 1 கோடி பரிசு வழங்கப்படும்.
          அடுத்த பதிவில் 12 ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள் பற்றி பார்ப்போம்.
            நன்றி.
     அன்புடன் சாம்ராஜ்.

                                                      ****************************
இதனையும் படிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த வார பார்வையாளர்கள் :


Entry
Pageviews
India
13853
United States
2317
Sri Lanka
403
United Arab Emirates
286
Unknown Region
250
Singapore
177
Malaysia
134
United Kingdom
72
Australia
56
Indonesia
Sep 3, 2015, 5 comments
6564
Dec 14, 2015
1593
Sep 2, 2015
898
Sep 28, 2015
861
Aug 29, 2017, 1 comment
471
Oct 3, 2017
389
Nov 17, 2015
361
Aug 27, 2015, 1 comment
291
Aug 29, 2015
219
Sep 18, 2015
215

Jan 13, 2020
                  194

Pageviews by Browsers
Entry
Pageviews
Chrome
13074 (71%)
UCBrowser
2247 (12%)
Firefox
1162 (6%)
Opera
762 (4%)
SamsungBrowser
395 (2%)
Safari
349 (1%)
Mobile Safari
239 (1%)
Internet Explorer
90 (<1%)
OS;FBSV
50 (<1%)
Mobile
33 (<1%)
Pageviews by Operating Systems
Entry
Pageviews
Android
14387 (82%)
Windows
2182 (12%)
iPhone
424 (2%)
Linux
237 (1%)
Mobile
92 (<1%)
iPad
64 (<1%)
Unix
42 (<1%)
Macintosh
39 (<1%)
Android 7.1.1
29 (<1%)
Nokia
19 (<1%)

            மேற்கண்ட என் உலகத்தமிழர்களுக்கு எனது நன்றிகள் கோடி. "இறைவன் உன் இதயத்தில் இருப்பதனால் உனக்கும் உன்னால் நேசிக்கப்படுபவர்களுக்கும் ஒரு துன்பமும் வராது.  ... தொடரும்.

Monday, January 13, 2020

7 வது வார்டு துளைநீர் (Bore water) மறுசீரமைப்பு

பழுதடைந்த துளைநீர் இயந்திரம் :




      கூனாண்டியூர் ஊராட்சி 7 வது வார்டிற்கு உட்பட்ட (கீரைக்காரனூர்) மாரியம்மன் கோவில் அருகில் இருக்கும் துளை நீர் குழாய் கடந்த 3 ஆண்டுகளாகப் பழுதடைந்து காணப்படுவதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு உள்ளாகினர். 


மறுசீரமைப்பு செய்யப்பட்ட துளைநீர் குழாய் :

      சில தினங்களுக்குமுன் பதவியேற்ற கூனாண்டியூர் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி A. விஜயா ராஜாகண்ணு கவனத்திற்கு இத்தகவல் வந்தது. இதனை தொடர்ந்து இரவோடு இரவாக இத்துளை நீர் குழாயினை சீரமைத்து, நாளையே அப்பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைக்க உத்தரவிட்டார் தலைவர் திருமதி. A. விஜயா ராஜாகண்ணு. அதன் பேரில் திரு. ராஜாகண்ணு அவர்கள் தலைமையில் இன்று 13.01.2020 இரவு 9 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை சீரமைப்பு பணி நடைபெற்றது.

பொங்கல் முதல் குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு :
   
       
          3 ஆண்டுகளாக குடிநீருக்காக மிகவும் திண்டாடிய அப்பகுதி மக்கள் இப்பொங்கல் பண்டிகைக்கு குடிநீர் இன்றி வருந்தா நிலையை உருவாக்கித் தந்த, ஊராட்சி தலைவரின் சீரிய பணி குறித்து பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.


கூனாண்டியூர் பஞ்சாயத்து

 உள்ளாட்சித் தேர்தல் 2019


              3 ஆண்டுகளாக நடக்காமல் ஒத்திவைக்கப்பட்டிருந்த உள்ளாட்சித் தேர்தல் நீண்ட இழுபறிக்குப் பின் உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து 2019 டிச.27 மற்றும் 30 தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையர் திரு. பழனிச்சாமி அறிவிப்பினைத் தொடர்ந்து, கிராம ஊராட்சிகளுக்கு அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்பட்டன. இந்த வார்டுகளில் வாக்காளர்களாக உள்ள மக்களால் ஊராட்சி மன்றத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த ஊராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக இருக்கிறது. 

ஊராட்சி மன்றத் தலைவர் :


        ஊராட்சி மன்றத்திற்கான தலைவர் மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யடுகின்றார். இந்த ஊராட்சி மன்றத்திற்கான துணைத் தலைவர் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களால் தேர்வு செய்யடுகின்றார். ஊராட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் ஊராட்சி மன்றக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி ஊராட்சி மன்றத்தலைவரே அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார்.

          இதன்படி நடந்து முடிந்த 27 டிச 2019 தேர்தல் முடிவுகள் 02 ஜன 2020 அன்று வெளியானது. இதில்  பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் கூனாண்டியூர் ஊராட்சி மன்றத் தலைவராக திருமதி. A. விஜயா ராஜாகண்ணு வெற்றிபெற்றார்.

அநியாயங்களை அதிகாரத்தால் அடக்குவது :


           
          வெற்றி குறித்து தலைவர் திருமதி. A. விஜயா ராஜாகண்ணு கூறுகையில் "நான் எவ்வாறு என் மக்கள் மீது அன்பும் அக்கறையும் கொண்டுள்ளேனோ, அவ்வாறே என் மக்களும் என்மீது அன்புகொண்டு என்னை மிகவும் நம்புகின்றனர். இதனை அவர்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் உணருகின்றேன். எனவே என் மக்களுக்கு என்னால் இயன்ற வரை நன்மைகள் செய்திடுவேன். அநியாயங்களை அதிகாரத்தால் தட்டிக்கேட்பேன். இதுவரை யாரும் செய்திடா எண்ணற்ற பொது சேவைகளை செய்து மக்களுடன் மக்களாய் கலந்திடுவேன். என்னை வெற்றி பெறச்செய்த என் வாக்காள பெருமக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கின்றேன்." என சூளுரைத்தார்.