koonandiyurpanchayat

koonandiyurpanchayat
KOONANDIYUR PANCHAYAT

Saturday, August 29, 2015

காதல் வந்தது...

காதல் வந்தது...

                
                          ''இளவேனிற் கால பஞ்சமி..
                           அவள் வானில் வந்த பௌர்ணமி..
                           சித்திர வானம் சித்திரம் தீட்டிடும் மேகம்
                           ஒரு பத்தரை மாத்து தங்க நிலாவைச் சந்தித்தேன்.
                           எங்கள் பார்வை நின்று போனது  வானம் பூமி என்ன ஆனது?''
                                                                                                                          - அறிவுமதி      

காதல் ;
              
                காதல் என்பதற்கு நேசிப்பது, அன்பு செலுத்துவது என்று பொருள் கொள்ளலாம். வாலிப பருவத்தில் இருக்கும் ஒரு ஆண் வாலிப பருவத்தில் இருக்கும் ஒரு பெண் மீது காதல் கொள்வதும், வாலிப பருவத்தில் இருக்கும் ஒரு பெண் வாலிப பருவத்தில் இருக்கும் ஒரு ஆணை விரும்புவதும் உலக வழக்கம்.  

             காதல் மட்டும் ஒருவருக்கு சரியாக அமைந்துவிட்டால் இந்த பிரபஞ்சம் அவருக்கு சொர்க்கமாக காட்சியளிக்கும். மனது மென்மையாக மாறிவிடும். தன் காதலுக்காக எதையும் சாதிக்கும் ஆற்றல் கிடைக்கும். அத்தகைய ஆழமான உண்மையான காதல் முறிந்துவிட்டால் உலகமே இருளாகத் தெரியும். அந்த விரக்த்தியிலும் வழியிலும் இருந்து மீண்டு எழுவது கடினம்.

             
              காதலிப்பதற்காக மட்டுமா பிறந்தோம்? காதல் மட்டுமா வாழ்க்கை? இந்த உலகில் நாம் பிறவி எடுத்ததற்கு காரணம் காதலித்து காதலில் தோல்வி அடைந்து விரக்த்தியில் உயிரைவிடும் நோக்கத்திற்காகவா?

                     என்று பலர் அறிவுரை புகட்டியும் சில தோல்வியுற்ற காதலர்கள் தற்கொலை செய்து கொள்வதுண்டு, சிலர் திருமணமே செய்து கொள்ளாமல் காதலர் நினைவிலேயே வாழ்வதுண்டு, மேலும் சிலர் மனநோயாளியாக மாறுவது என காதல் தொல்வியுற்றவர்களின் வாழ்க்கையில் பல மாற்றங்களை பார்க்க முடிகின்றது.   

                   தாய், தந்தை, சகோதிர சகோதிரிகள், நண்பர்கள், சொந்த பந்தம் என்பவை அனைத்தும் நாம் பிறந்து குழந்தையாக இருக்கும் போதிலிருந்தே நம் கூடே வருவனவாகும். வாலிப வயதில் ஒரு ஆணிற்கு ஒரு பெண்மீது வரும் இனம்புரியாத அன்பே காதலாகும். தான் பிறந்தது முதல் இதுவரை அனுபவிக்காத ஒரு சுகமான புதுவித உறவு காதல். உள்ளத்தாலும் உடலாலும் இணைந்து நெடுந்தூரம் பயணிக்க வைக்கும் உறவு காதல். தன்  இன்ப துன்பங்கள், கஷ்ட்ட நஷ்ட்டங்களை மனதார பகிர்ந்து கொள்ள உதவும் உன்னத உறவு காதல். என உணரும் போது காதல் தோல்வியில் துயரம் இருக்கத்தான் செய்யும். 

வாழ்க்கையின் மீது காதல் வந்தது :

                   அறிவுள்ள சிலரோ சோதனைகளை மனதின் ஓர் ஓரத்தில் வைத்து விட்டு தன் தாய் தந்தை குடும்பம் இவற்றை எண்ணிப்பார்த்து சூழ்நிலையால் சில மாற்றங்களை அடைந்து தன் வாழ்க்கைக்கு தேவையான துணையை மணமுடித்து குழந்தைகளுடன்  மகிழ்ச்சியாக வாழ்வதுண்டு.

 
            உலகம் அழகானது அமைதியானது இந்த உலகத்தை நாம் நேசித்தோமானால் இந்த உலகமே நம்மை நேசிக்கும். ஒவ்வொரு நாளும் இயற்கையோடு உறவாடி உயிகளிடத்தில் அன்பு செலுத்தி வாழ்வோம். இறைவன் நமது கர்ம வினைப்பயனாக நாம் வாழ்வதற்குக் கொடுத்த இந்த வாழ்க்கையின் மீது காதல் கொள்வோம். 

ஜோதிடமும் காதல் யோகமும் ; 

                ஜாதக ரீதியாக காதலை குறிக்கும் வீடு 5 ஆம் வீடு. காதலுக்குரிய கிரகம் சுக்கிரன். மனதிற்குரிய கிரகம் சந்திரன்.  இடத்திற்கும் கிரகங்களுக்கும் வலிமையை கூட்டும் கிரகம் குரு. இவர்களின் நிலையை அறிந்தே ஒருவருக்கு காதல் எப்போது வரும்? எந்த மாதிரி நபருடன் காதல் வரும்? காதல் வெற்றி பெறுமா? தோல்வி பெறுமா? திருமணம் எப்போது நடக்கும்? நிச்சியத்த திருமணமா? அல்லது காதல் திருமாணமா? என்பதனை அறிய முடியும்.


               ஒருவர் ஜாதகத்தில் 5 ஆம் அதிபர் 7 ல் இருந்தாலோ அல்லது 7 ஆம் அதிபர் 5 ல் இருந்தாலோ காதல் ஏற்படும். காதல் திருமணமே நடக்கும். சுக்கிரன் ஆட்சி, உச்சம் பெற்று குரு பார்வையை பெற்று இவர்களின் தொடர்பு 5 அல்லது 7 வீட்டிற்கு இருந்தால் காதல் ஏற்படும். 2 அல்லது 5 ல் சந்திரன் இருந்தால் காதல் உண்டாகும். 

               5 ஆம் அதிபர் மறைவு, சுக்கிரன் நீசம், 7 ஆம் வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட தீய கிரகங்கள் காணப்பட்டால் காதல் தோல்வி அடையும். காதல் செய்ய துவங்கும் போது நடுப்பு தசா புத்தியும் கொட்ச்சார கிரக அமைப்பும் பார்த்து காதல் செய்வது முக்கியம். கேது தசை அல்லது ராகு புத்தி, சனி புத்தி, ஏழரைச்சனி காலங்களில் காதல் ஆரம்பம் ஆகக்கூடாது. அப்படி ஆரம்பித்தால் அந்த தீய தசா புத்தி முடியும் பொது காதலும் முடிந்துவிடும்.

         

             

No comments:

Post a Comment