koonandiyurpanchayat

koonandiyurpanchayat
KOONANDIYUR PANCHAYAT

Monday, October 7, 2019

விஜயகாந்த் ஜாதகம் - பகுதி - 3 (இறுதி பகுதி)

முந்தைய தசாபுத்தி :


      கடந்த 17.02.2019 வரை புதன் தசையில் ராகு புத்தி நடந்ததால் தூர தேசப்பயணம், மருத்துவ மனை  செலவு, வெளி மாநிலம், வெளிநாட்டு பயணம்,  அயன சயன போகம், வேற்று மொழி பேசுவோர் தொடர்பு போன்ற பலன்களும் சில நாட்கள் அதிக நேரம் தூங்குவது, சில நாட்கள் தூக்கமின்மையால் 2 அல்லது 3 மணி நேர தூக்கம். ஆன்மீக தொடர்பு உண்மையான சித்தர்கள் சாதுக்கள் யோகிகள் தொடர்பு, பல்லி, பாம்பு, உடும்பு உருவில் சித்தர்கள் தலை மட்டும் காட்சி தருவது.
                   ஒரு சிலருக்கு 12 ஆம் அதிபர் தசா புத்திகளில் கடும் விரையம், தனிமை, உலக வாழ்கையில் இருந்து விலகி இருப்பது. தன்னிலை மறத்தல், மன அழுத்தம், உடல் உபாதை, கோமா நோய், பிறரிடம் தஞ்சம் அடைதல், முயற்சிகளில் இழுபறி, எதிர்பார்ப்பில் ஏமாற்றம், கனவில் பாம்பு வருவது, பூரான் கொட்டுவது போன்றவை ஏற்பட்டு விலகும்.     

நடப்பு தசாபுத்தி : 


      
        புதன் இவருக்கு பூர்வ புண்ணியாதிபதி அட்டமாதிபதி என்பதால் புதன் தசையின் (17 வருடங்கள்) பாதி காலம் சுப பலன்களும் மீதி காலம் அசுப பலன்களும் நடக்கும். 02.02.2007 முதல் புதன் தசை தொடங்கியது. தற்போது புதன் தசை முடியும் காலம். அதாவது 02.02.2024 அன்றுடன் இவருக்கு புதன் தசை முடிகின்றது.  தற்போது 25.05.2021 வரை புதன் தசையில் குரு புத்தி நடைபெறுவதால் குரு இவருக்கு தன, குடும்ப ஸ்தானம் மற்றும் லாப ஸ்தானாதிபதியாகி, ஆட்சி பெற்ற சூரியன் சாரம் பெற்று (களத்திர ஸ்தானாதிபதி) 3 ஆம் வீடான வெற்றி, தைரியம், வீரியம், போராட்டம், இளைய சகோதர ஸ்தானத்தில் அமர்ந்து வளர்பிறை  சந்திரனின் சுப பார்வை பெற்று (360 டிகிரி)  புத்தி நடப்பதால் (இதுலாம் எங்களுக்கு புரியாது, மேட்ர மட்டும் சொல்லு னு கூட்டத்துல சிலர் கேட்குறிங்க, புரியுது.)

உடல்நிலை முன்னேற்றம் :

          முழு சந்திரனை மேகம் மறைத்து கொண்டது, சில நிமிடங்களுக்குப் பிறகு மேகம் கொஞ்சம் கொஞ்சமாக விலக, மீண்டும் சந்திரன் தன் முழு பிரகாசத்தையும் வெளிபடுத்துகிறது. அதுபோல் இதுநாள் வரை இருந்து வந்த உடல் உபாதைகள் படிப்படியாக குறைந்து முன்பைவிட ஆரோக்யமாகவும் புது எழுச்சியுடனும் எழப்போகும் காலம் நெருங்கிவிட்டது. 
         இவர் சில மாதங்களுக்கு பிறகு சமீபத்தில் திருப்பூர் கூட்டத்தில் பேசுகையில் "மக்களாகிய உங்களை எல்லாம் சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி, இங்கு என்னை காண வந்த அனைவரும் தத்தம் வீட்டிற்கு பார்த்து பத்திரமாகச் செல்ல வேண்டும். நான் நலமாக உள்ளேன். விரைவில் (அடுத்த முறை) உங்களுடன் 1 மணி நேரம் பேசுவேன்" என்று பேசுகையில் தன் உடல்நிலை சற்று சரியில்லாத போதும் அதிகம் பேச இயலாத உடல் நிலையில் இருந்தும் தன் துயர் (தன்னலம்) மறந்து, பொது நலம் (மக்கள் நலம்) கருதி நீங்கள் அனைவரும் பத்திரமாக வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறும் உயர்ந்த குணம் கலைஞர்களுக்கே உரியது. 
              அதிலும் நம் விஜயகாந்தின் அச்சூழ்நிலை பேச்சையும் உடல் தோற்றத்தையும் பார்த்து கண் கலங்கியோர் பல லட்சம் பேர்.

கவலை வேண்டாம் :
      
      
       
         அந்த சமீபத்தில் வெளியான விஜயகாந்தின் திருப்பூர் மேடைப்பேச்சே என்னை இப்பதிவிட பெரிதும் தூண்டியது. நம் விஜயகாந்த் ஜாதகம் ருச்சுக யோகம், கஜகேசரி யோகம், விபரீத ராஜயோகம் போன்ற பல பெரிய யோகங்கள் நிறைந்து, ஆயுள் காரகன் ஆயுள் ஸ்தானத்தில் அமர்ந்து ஆயுள் வழுப்பெறுவதால் சிறப்பாக உள்ளது. விதியின் மரணத்தை எவராலும் துல்லியமாகக் கணிக்க இயலாது. நீ மற்றும் உன் மரபினர் செய்த தருமமும் புண்ணியமும் இவ்வுலகில் இருக்குமாயின் விதியின் மரணத்தைக் கூட மறு பரிசீலனைச் செய்யலாம்.

தலைவர் :
           "பதவியில் இருப்பவர்கள் மட்டுமே தலைவர்கள் அல்ல, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்களும் தலைவர்களே" எனவே நம் விஜயகாந்த் அவர்களும் எப்போதும் தலைவரே. 

   
        நம் தலைவரின் ரசிகர்கள், தொண்டர்கள் அனைவரும் மேற்கண்ட தகவல்களை  100% முழுமையாக நம்பவேண்டும். குறிப்பாக பழைய விஜயகாந்த் விரைவில் திரும்ப வருவார் என்பதை மனதார ஆழமாக நம்பவேண்டும். தயவு செய்து உங்கள் நம்பிக்கையும் பிராத்தனையும் தலைவருக்கு எப்போதும் இருக்க தாழ்மையுடன் வேண்டுகிறேன். இப்படி பல லட்சம் மக்களின் உண்மையான பிராத்தனைகள் ஒரு உன்னத மனிதரின் உயர்ந்த ஜாதகத்திற்கு மேலும் வழு சேர்க்கும். 

அரசியல் வாழ்கை :
       
         புரட்சி கலைஞர் திரு. விஜயகாந்த் அவர்களின் தொழில், அரசியல், மக்கள் சேவை குறித்து அடுத்த பதிவில் பார்ப்போம் என்று இம்முறையும் நான் உங்களை ஏமாற்ற விரும்பவில்லை. உங்களை ஏமாற்றும் எண்ணமும் எனக்கில்லை. அரசியல் (உள்ளாச்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல், பாராளுமன்ற தேர்தல்) குறித்து அறிவிப்பு வந்த பிறகே அதனை துல்லியமாக கணிக்க முடியும். காரணம் தேர்தல் அறிவிப்பு நாள், தேர்தல் முடிவு நாள் அடிப்படையில் அந்த காலத்திற்கான தசை, புத்தி, அந்தரம், கோச்சாரம் பார்த்து முடிவு செய்ய முடியும். மேலும் நம் கேப்டன் மனைவியார் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் ஜாதகமும் தேவை. எனவே இந்த விவரங்கள் அதற்கான நேரம் காலம் வரும்பொழுது கணிப்பதே உத்தமம். 

           இத்துடன் நம் புரட்சி கலைஞர் திரு. விஜயகாந்த் அவர்களின் ஜாதகப் பலன்கள் நிறைவு பெறுகிறது.
        
         
                 
                                                                     நன்றி...
                                            *********************************
            அன்பர்கள் இதனையும் படிக்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
உங்கள் அன்பிற்குரிய நான் :
           Google search, Facebook, Whats app போன்ற வழிகளில் என் வலைதளத்தின் ஜோதிட ஆன்மீக கட்டுரைகளை உலகத் தமிழர்கள் பலர் தொடர்ந்து படித்து ஆதரவு கொடுத்து வருகின்றீர்கள். என் கட்டுரைகளைப் படித்து Facebook ல் உங்கள்  கருத்துக்களையும் (Comments) விருப்பங்களையும் பகிர்ந்து வருகிறீர்கள். அதனை இவ்வலைதளத்திலேயே உங்கள் mail id பயன்படுத்தி பதிவிடலாம். ஆரோக்கியாமான கருத்துக்கள் சந்தேகங்கள் வரவேற்கப்படுகிறது.

இந்தவார பார்வையாளர்கள் :   
India
11289
United States
1913
Sri Lanka
363
United Arab Emirates
275
Singapore
168
Unknown Region
121
Malaysia
109
United Kingdom
70
Australia
56
Indonesia
45

     மேற்கண்ட அனைவருக்கும் நன்றி உங்கள் வாழ்க்கை வளம்பெற என் இறைவன் துணை புரியட்டும். (இறைவன் உன் இதயத்தில் இருப்பதனால் உனக்கும், உன்னால் நேசிக்கப்படுபவர்களுக்கும் ஒரு துன்பமும் வராது.) இத்தளத்தில் நான் பல நாட்கள் இரவு நேரங்களில் பதிவிடல் மற்றும் அதிவேக தட்டச்சு காரணமாகவும்   இவ்வலைதளத்தின் கட்டுரைகளில் வார்த்தைப்பிழை, எழுத்துப்பிழை இருக்ககூடும். பொறுத்தருள்வீர். மற்றும் நான் மனதார அனைத்து நல்லுயிர்களுக்கும் நன்மை உண்டாகவே நாள்தோறும் எண்ணுகின்றேன். 

               என் கட்டுரைகள் யார் மனதையேனும் புண்படுத்தி இருந்தால் உடனே Email : yessamraj@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரிய படுத்துங்கள் அல்லது தினம்தோறும் காலை வேளையில் சிறிது வேப்பிலை, கீழாநெல்லி, சோற்றுக்கற்றாளை, துளசி, மிளகு தக்காளி, ஆவாரம்பூ, அகத்திக்கீரை இவற்றை சாப்பிட்டு வாருங்கள். உங்கள் மனம் எவ்வளவு புண்பட்டிருப்பினும் விரைவில் குணமாகிவிடும். 

நன்றி.. வேறு ஒரு நல்ல தலைப்பில் மீண்டும் சந்திப்போம். நான் என் தனிப்பட்ட வேலை நிமித்தமாக சென்னை செல்ல இருப்பதால் என் அடுத்த கட்டுரை வெளிவர அனேகமாக இன்னும் சில வாரங்கள் ஆகலாம். 
    
அன்புடன் 
             சாம்ராஜ்... 



     

Saturday, October 5, 2019

விஜயகாந்த் ஜாதகம் - பகுதி 2

புரட்சி கலைஞர் விஜயகாந்த் :




            ஜாதகப்பலன் வாசர்களுக்கு வணக்கம். சில ஆண்டுகளுக்கு முன்பு இதே  வலைதளத்தில் நடிகர்கள் விஜய், அஜித் ஜாதகங்களை பற்றி ஒரு கட்டுரை வெளியிட்டேன். அதில் பொது விபரங்கள் மட்டுமே (ராசி, நட்சத்திரம், குணாதிசயம்) கூறினேன். மற்ற முழுமையான விபரங்கள் அடுத்த பதிவில் பார்ப்போம். என்று கூறிவிட்டு சில பல காரணங்களால் அஜீத் விஜய் பற்றிய அடுத்த கட்டுரையை வெளியிடவில்லை. 
             சிலர் விஜய், அஜித் பற்றிய அடுத்த பதிவை போடுங்கள் போடுங்கள் என தொடர்ந்து வற்புறுத்தினர். "அடுத்த பதிவு போடுறது பற்றி இல்ல போடலாம், போட்டா பிறகு என்னை போட்ருவாங்க ரசிகர்கள்". நாம ஏதாவது ஜாதகப்படி சொல்லி, ஏய் தலைய பத்தி என்ன சொன்ன? னு  சண்டைக்கு வருவாங்க. எதுக்கு வம்புனு தான் நிறுத்திட்டேன். 
                அதனால் அதுபோலவே நம் விஜயகாந்த் ஜாதகம் குறித்தும் பல முறை யோசித்தேன். பல யோசனைகளுக்குப் பிறகு துணிந்து பதிவிடலாம் என்று முடிவு செய்தேன். அத்துடன் இந்த நேரம் இதற்கு சரியான நேரம் என ஆழ்மனதில் தோன்றியது.

இறைவன் இருக்கின்றான் :



        மற்றவர்களுக்கு இதய பூர்வமாக உதவுபவர்களுக்கு இறைவனும் உதவுவான். உன்னால் இயன்ற அளவிற்கு நற்செயல்களை செய். (இது நான் சொல்லியது அல்ல. காலை மேச்சேரி சினிமா அலுவலகத்திற்கு வரும்போது மேச்சேரி வனபத்ரகாளி அம்மன் கோவில் வானொலியில் ஒலித்தது.) "அதான பார்த்தேன் உன்னாலலாம் இந்த அளவுக்கு யோசிக்க முடியாது னு சொல்றிங்க. புரியுது, பரவாயில்லை".  

              மேற்கண்ட வாசகத்திற்கு உதாரணம் நம்ம விஜயகாந்த். கும்ப லக்கினத்தில் பிறக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பார்கள். நிறைகுடம் ததும்பாது. எத செய்யணும் எத செய்யக் கூடாது எது நல்லது எது கேட்டது னு சரியா முடிவு எடுப்பாங்க. பெரியோர் சான்றோர்களை மதிப்பர். பணிவு, அடக்கம், பொதுநலம் விரும்பும் இவர்களுக்கு சனி அதிபராக வருவதால் சனிக்குரிய கருப்பு நிறம், கடின உழைப்பு, ஏழைகளுக்கு உதவுதல், சிறுவயதில் ஒல்லியான தேகம் மத்திம வயதிற்கு பிறகு குண்டான தேகம் சதை தொங்கும் முகம், நீதிபதி, நாட்டாமை, அரசு, அரசியல் செல்வாக்கு, வீட்டில் அல்லது நெருங்கிய உறவில் உடல் ஊனமுற்றோர், தனக்கு கீழ்படியும் நல்ல வேலைக்காரர்கள், வண்டி வாகனம் என கொடுப்பினை உண்டு.

சனீஸ்வர பகவான் :

           நவ கிரகங்களில் சனிக்கே ஈஸ்வர பட்டம். சனியே மிகப்பெரிய கோள். (அறிவியல்படி குரு {Jupiter} ) எனவே முதல் 30 ஆண்டுகள் கடுமையான போராட்டங்களை கடக்க வேண்டிய நிலை. தன் 12 அல்லது 13 ஆம் வயதில் தலைக்கு அடிபடும்படி சிறு வாகன விபத்து ஏற்பட்டிருக்கும் (உதாரணம் : சைக்கிள் ஓட்டி கீழே விழுதல்). இதனாலோ அல்லது பிறவி முதலோ உச்சம் தலையிலோ முகம் அல்லது நெற்றி பகுதியில் தழும்பு, மச்சம், மரு நிச்சயம் இருக்கும். 

சினிமா :


     கடவுள் வந்து என்னிடம் "நீ நாளை இறந்து விடுவாய், இன்று உன் ஆசை என்ன என்பதை கூறு, நிறைவேற்றுகிறேன்" என்று கேட்டால், நான் சொல்வேன் "இறைவா உன் உத்தரவு படியே எல்லாம் நடக்கட்டும். இன்று நான் விஜயகாந்த் நடித்த "வைதேகி காத்திருந்தாள்", ரஜினிகாந்த் நடித்த "வீரா", கமல்ஹாசன் நடித்த "சலங்கை ஒலி", AVM ராஜன் நடித்த "திருவருள்" இந்த நான்கு திரைப்படங்களையும் எந்த சிறு தொந்தரவும் இல்லாமல் தனிமையில் ஒரு முறை பார்க்க வேண்டும் என்று கேட்பேன்.
          இதில் முதலில் ஒளிபரப்பாகும் படம் "வைதேகி காத்திருந்தால்". இவர் ஜாதகத்தில் சுக்கிரன் தன் சொந்த நட்சத்திரத்தில் பயணிப்பதாலும் 12 ல் ராகு இருப்பதாலும் சினிமா துறையில் நுழைந்தார் வென்றார். வித்யாகாரகன் புதனுடன் கேது சேர்ந்ததால் கல்வி தடை. மறைந்த புதன் நிறைந்த அறிவு, ஞானம், பேச்சாற்றல் தந்தது. 

திருமண வாழ்கை :
            களத்திர ஸ்தானாதிபதி பாக்கிய ஸ்தானம் ஏறி குரு பார்வை பெறுவது அழகான அன்பான தெய்வ பக்தி நிறைந்த பாக்கியமான மனைவி அமைவார். "இதுலாம் இறந்தகாலம் (past)  எங்களுக்கே தெரியும். எதிர்காலம் (future) பற்றி சொல்லுங்க"னு கேக்குறிங்க புரியுது. பொறுமை காக்கவும்.  

              7 ல் உள்ள சுக்கிரன் ஆட்சி பெற்ற சூரியனுடன் சேர்ந்ததால் காரகபாவ நாஸ்தி விலகியது. திருமணத்திற்கு பிறகு திடீர் திருப்பமும் அதீத முன்னேற்றமும் முன்பை விட மதிப்பு மரியாதை கூடியதும் உண்மை. மனைவியின் பக்கபலமும் இவருக்கு முழுமையாக உண்டு.

செவ்வாய், சூரியன் : 
          அரசு, அரசியல், ஆளுமை, தலைமை போன்றவற்றுக்கு காரகத்துவம் கொண்ட கிரகங்கள் சனி, சூரியன், செவ்வாய் ஆகியனவாகும். இவர் ஜாதகத்தில் இம்மூன்று கிரகங்களும் வலுப்பெற்றுள்ளது. குறிப்பாக சூரியன், செவ்வாய் எனும் இரு கிரகங்களும் தத்தம் வீடுகளில் அமர்ந்து 100 % ஆட்சி பலத்துடன் காணப்படுகின்றன.

                                                             நன்றி

தொடரும்... நாளை (உடல்நிலை, அரசியல் எதிர்காலம், future ect... )

விஜயகாந்த் பிறப்பு ஜாதகம் ஒரு அலசல் (ஜோதிடர் சாம்ராஜ்)

விஜயகாந்த் பிறப்பு ஜாதகம் ஒரு அலசல் : 

             வணக்கம் மக்களே (இது என் வசனம் இல்லைங்க கேப்டன் வசனம்) நீண்ட மாதங்களுக்குப்பிறகு வலைத்தளம் வாயிலாக மீண்டும்  உங்களுடன் என் அனுபவத்தை பகிர்ந்துகொள்வதில் மிக்க மகிழ்ச்சி. 
     
           மக்கள் எனும் வார்த்தை முதன் முதலில் தொல்காப்பியத்தில் தான் இடம்பெற்றது என படித்த நியாபகம். அதற்கடுத்து எத்தனையோ அரசியல் தலைவர்கள் மக்களை மக்களே என்று அழைத்தாலும் இவ்வார்த்தையை கேட்டவுடன் எனக்கு  முதலில் நியாபகம் வருவது பெரும் மரியாதைக்குரிய திரு. விஜயகாந்த் அவர்கள் தான். இது ஜோதிட கணக்கு அல்ல ஒரு சிறிய கற்பனை ஒரு வேளை அவர் முதல்வரானால் முதலில் அம்மா உணவகம், அம்மா மருந்தகம் எனும் அனைத்தும் மக்கள் உணவகம், மக்கள் மருந்தகம் என பெயர்  மாற்றப்படும். (இது அவர் சொல்லியது அல்ல என் கற்பனை).

        தன் தாயிக்கு மூன்றாவது பிள்ளையாகப் பிறந்த திரு. விஜயராஜ் சிறு வயது முதலே சினிமா மோகத்தில் கல்வியில் கவனத்தை இழந்தவர். நண்பர்கள் உதவியுடன் சினிமாவில் நடிக்க முயற்சித்து ஒரு 149 படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்து முடித்த ஓரிரு படங்கள் சில காரணங்களால் திரைக்கு வரவில்லை. 

        இவர் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் மீதுள்ள பற்றினால் கடும் எதிர்ப்பிற்கு பிறகு தன் 100 - வது திரைப்படத்திற்கு "கேப்டன் பிரபாகரன் " (இயக்கம் : R.K. செல்வமணி) எனப் பெயர் வைத்தார். அது மட்டுமின்றி தன் மூத்த மகனுக்கும் விஜய பிரபாகரன் எனப் பெயர் சூட்டினார். 

        சிறு வயது முதலே நாட்டுப்பற்று, அநீதியை தட்டிக்கேட்க்கும் துணிச்சல், நீதி, நேர்மை, அன்பு, கருணை, வீரம், கோபம், தருமம் என ஒரு உயர்ந்த கொள்கையுடன் வாழத் தொடங்கினார். இவரை நான் முதன் முதலில் 2006 ஆம் ஆண்டு (சுதேசி பட வேளை) மேச்சேரியில் பிரச்சாரத்திற்கு வந்திருந்த போது பார்த்தேன். அப்போது அவர் நாட்டில் நடந்த ஒரு அநீதி குறித்து பேசுகையில் "மோதுறதா இருந்த நெஞ்சுக்கு நேரா ஒத்தைக்கு ஒத்தை வாடா பாத்துக்கலாம், நானும் மதுர காரன்தான்டா, கிராமத்தான் தான், மோதுவோம் வரியா ?" என தன் வேட்டியை மடித்து கட்டினார். அன்று தான் நான் ஒரு நிஜ ஹீரோவை நேரில் பார்த்தேன். எனக்கும் சினிமா மீது பற்றுவர முதல் காரணம் இவர் தான். இவரை பற்றி பேச விரும்பினால் ஒரு புத்தகமே போடும் வரை பேசலாம்.

          அதற்கு அவசியமில்லை காரணம் "விஜயகாந்த் வாழ்க்கை வரலாறு" எனும் புத்தகத்தை ஆசிரியர் திரு. யுவகிருஷ்ணன் எழுதி வெளியிட்டுள்ளார். முடிந்தால் வாங்கி படியுங்கள் தற்போது நாம் நம் தலைப்பிற்கு வருவோம்.
  
சுப ஜனனம் :
            இன்று திரைப்பட நடிகர், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தலைவர், தயாரிப்பாளர் ஆகிய மரியாதைக்குரிய திரு. விஜயகாந்த் (கலைமாமணி, புரட்சி கலைஞர், கேப்டன்) அவர்களது ஜாதகம் குறித்து பார்ப்போம்.
               
பெயர் : விஜயராஜ் (ஜாதகப்படி)
பிறந்த தேதி & நேரம் : 25.08.1952 இரவு 07.10
பிறந்த இடம் : விருதுநகர், தமிழ்நாடு, இந்தியா (இடம்பெயர்ந்தது மதுரை)
தாய் தந்தை : ஆண்டாள், அழகர்சாமி



         ஆவணி மாதம் திங்கள் கிழமை கும்ப லக்கினம், துலா ராசி சித்திரை நச்சத்திரம் பாகம் - 4 வளர்பிறை பஞ்சமி திதி புலி யோனியாக சுப யோக சுப தினத்தில் சுப ஜனனம்.

தொடரும்...
நாளை விரிவாகப் பார்ப்போம் (உடல்நிலை, எதிர்காலம், அரசியல் etc...)