koonandiyurpanchayat

koonandiyurpanchayat
KOONANDIYUR PANCHAYAT

Thursday, August 27, 2015

ரிஷப ராசியில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள்

ரிஷபம் ; 
            ரிஷப ராசியை ஜென்ம ராசியாகக்கொண்டு பிறந்தவர்கள் பக்தி சிரத்தையுடன் காணப்படுவர்.சந்திரன் இங்கு உச்சம் பெறுவதால் கற்பனை வளம் நிறைந்தவர்களாகவும் கலை உணர்வு கொண்டவர்களாகவும் இருப்பர். தன்னை அலங்கரித்துக் கொள்வதிலும் வீடு இருப்பிடத்தை சுத்தமாக வைத்துக்கொள்வதிலும் இவர்கள் திறமைசாலிகள். 

             குழந்தைகளிடத்தில் பாசமாகவும் பிரியமாகவும் நடந்துக்கொள்வார்கள். செல்வ வசதி வாய்ப்புகளைப் பெற்று மகிழ்ச்சியாக வாழக்கூடியவர்கள். சில நேரங்களில் சிறிது முன் கோபமும் பய உணர்வும் வந்து போகும். வாலிப பருவத்தில் இருப்பவர்களுக்கு சிற்றின்ப ஆசைகள் வந்து போகும்.

            ராசி அதிபதி சுக்கிரன் என்பதால் காதலில் வெற்றியும் நல்ல வாழ்க்கை துணையும் அமையும். எதையும் கலை உணர்வுடனும் செய்யக்கூடியவர்களாக இருப்பர். 

            கிருத்திகை 2, 3, 4, ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரிஷப ராசிக்காரர்கள்.

No comments:

Post a Comment