koonandiyurpanchayat

koonandiyurpanchayat
KOONANDIYUR PANCHAYAT

Thursday, August 27, 2015

துலாம் ராசியில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள்

துலாம் :




           துலாம் ராசியை ஜென்ம ராசியாகக்கொண்டு பிறந்தவர்கள் நல்லது கேட்டது நீதி நேர்மை அறிந்து துல்லியமாக செயல்படக்கூடியவர்கள். பணம், சொத்து சுகம், கால்நடை விருத்தி, நல்ல வீடு, நிலபுலன்களை பெற்று சந்தோசமாக வாழக்கூடியவர்கள். இவர்களது குடும்பம் பெரிய குடும்பமாக இருக்கும்.

             ஒரு சிறந்த தலைவனுக்குரிய அனைத்து பண்புகளும் இவர்களிடத்தில் ஒருங்கே காணப்படும். பேச்சில் வல்லவர்கள். ஆணித்தரமாக பேசி முடிப்பவர்கள். தெய்வீக பக்தி கொண்டு சாஸ்த்திர சம்பிரதாயங்களை கடைப்பிடித்து வாழக்கூடியவர்கள்.

           ஆசிரியர், நீதிபதி, வழக்கறிஞர், கலைஞர், அரசியல் தலைவர் போன்ற பதவிகளை வகிக்கக்கூடியவர்கள். மற்றவர் விவகாரங்களில் தலையிட விரும்பாதவர்கள். வியாபார நோக்குடன் செயல்படக் கூடியவர்கள். பசி தான்காதவர்கள்.

         சித்திரை, 3, 4, ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3, பாதங்களில் பிறந்தவர்கள் துலாராசிக்காரர்கள் ஆகும். 

No comments:

Post a Comment