koonandiyurpanchayat

koonandiyurpanchayat
KOONANDIYUR PANCHAYAT

Thursday, August 27, 2015

மிதுன ராசியில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள்

மிதுனம் :

           மிதுன ராசியை ஜென்ம ராசியாகக்கொண்டு பிறந்தவர்கள் எப்போதும் சிரித்த முகத்துடனும் பேசுவதில் வல்லமையும் கணிதத்தில் புலமையும் பெற்று காணப்படுவார்கள். அடிக்கடி எண்ணங்களை மாற்றுபபவர்களாகவும் இரட்டை செயல்களை உடையவர்களாகவும் இருப்பார்.

         எழுதுவதில் நாட்டமும் ஜோதிட சாஸ்திரங்களில் நம்பிக்கையும் உடையவர்கள். நல்ல ஒழுக்கத்தையும் புகழையும் பெற்று தன் சொந்த உழைப்பால் முன்னேரக்கூடியவர்கள். கலைத்துறை, நடிப்பு, நகைச்சுவை போன்றவற்றில் ஆர்வமும் தேர்ச்சியும் இருக்கும். சமுதாயத்தில் கண்டிப்பும் கண்ணியமும் நிறைதவர்களாக திகழ்வார்கள்.

          எந்த ஒரு செயலையும் தைரியமாக செய்யக்கூடியவர்கள் இவர்கள்.புதன் அதிபதியாக வருவதனால் நல்ல கல்வியை பெற்று நிபுணத்துவமான அறிவை பெற்றவர்கள் இந்த ராசிக்காரர்கள். சில நேரங்களில் சுயநலம் மிகுந்தும் கபடத்தனம் கொண்டும் காணப்படுவர்.

         மிருகசீரிடம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 பாதங்களில் பிறந்தவர்கள் மிதுன ராசிக்காரர்கள் ஆகும்.

No comments:

Post a Comment