koonandiyurpanchayat

koonandiyurpanchayat
KOONANDIYUR PANCHAYAT

Monday, August 31, 2015

விவிலியம் - நீதிக்கு இலக்கணம்

விவிலிய பொன்மொழிகள் :


விவிலியம் கூறும் நீதிமொழிகள்

அதிகாரம் - 1


1.     தாவீதின் மகனும் இஸ்ரயேல் அரசனுமாகிய சாலமோனின் நீதிமொழிகள்.
2.     இவற்றைப் படிப்பவர் ஞானமும் நற்பயிற்சியும் பெறுவர்: ஆழ்ந்த கருத்தடங்கிய நன்மொழிகளை உணர்ந்து கொள்வர்:
3.     நீதி, நியாயம், நேர்மை நிறைந்த விவேக வாழ்க்கையில் பயிற்சி பெறுவர்:
4.     அறிவுற்றோர் கூரறிவு பெறுவர்: இளைஞர் அறிவும் விவேகமும் அடைவர்.
5.     ஞானமுள்ளோர் இவற்றைக் கேட்டு அறிவில் இன்னும் தேர்ச்சியடைவர்: விவேகிகள் அறிவுரை கூறும் திறமை பெறுவர்:
6.     நீதிமொழிகளையும் உவமைகளையும் ஞானிகளின் நன்மொழிகளையும் புதிர் மொழிகளையும் அவர்கள் உய்த்துணர்வர்.
7.     ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்: ஞானத்தையும் நற்பயிற்சியையும் மூடரே அவமதிப்பர்.
8.     பிள்ளாய்! உன் தந்தை தந்த நற்பயிற்சியைக் கடைப்பிடி: உன் தாய் கற்பிப்பதைத் தள்ளிவிடாதே:
9.     அவை உன் தலைக்கு அணிமுடி: உன் கழுத்துக்கு மணிமாலை.
10.     பிள்ளாய்! தீயவர்கள் உன்னைக் கவர்ச்சியூட்டி இழுப்பார்கள்: நீ அவர்களுடன் போக இணங்காதே.
11.     அவர்கள் என்னைப் பார்த்து, எங்களோடு வா: பதுங்கியிருந்து எவரையாவது கொல்வோம்: யாராவது ஓர் அப்பாவியை ஒளிந்திருந்து தாக்குவோம்:
12.     பாதாளத்தைப்போல நாம் அவர்களை உயிரோடு விழுங்குவோம்: படுகுழிக்குச் செல்வோரை அது விழுங்குவதுபோல, நாமும் அவர்களை முழமையாக விழுங்குவோம்.
13.     எல்லா வகையான அரும் பொருள்களும் நமக்குக் கிடைக்கும்: கொள்ளையடித்த செல்வத்தால் நம் வீடுகளை நிரப்புவோம்.
14.     நீ எங்களோடு சேர்ந்துகொள்: எல்லாவற்றிலும் உனக்குச் சம பங்கு கிடைக்கும் என்றெல்லாம் சொல்வார்கள்.
15.     பிள்ளாய்! அவர்களோடு சேர்ந்து அவர்கள் வழியில் செல்லாதே: அவர்கள் செல்லும் பாதையில் அடிவைக்காதே.
16.     அவர்கள் கால்கள் தீங்கிழைக்கத் துடிக்கின்றன: இரத்தம் சிந்த விரைகின்றன.
17.     பறவையைப் பிடிக்க, அதன் கண்முன்னே அன்று, மறைவாகவே கண்ணி வைப்பார்கள்.
18.     அவர்கள் பதுங்கியிருப்பது அவர்களுக்கே ஊறுவிளைவிக்கும் கண்ணியாகி விடும்: அவர்கள் அளிந்து காத்திருப்பது அவர்களையே அழிக்கும் பொறியாகி விடும்.
19.     தீய முறையில் பணம் சேர்க்கும் அனைவரின் முடிவும் இதுவே: அந்தப் பணம் தன்னை வைத்திருப்போரின் உயிரைக் குடித்துவிடும்.
20.     ஞானம் வீதிகளிலிருந்து உரத்துக் கூறுகின்றது: பொதுவிடங்களிலிருந்து குரலெழுப்புகின்றது:
21.     பரபரப்பு மிகுந்த தெருக்களிலிருந்து அழைக்கின்றது: நகர வாயிலிருந்து முழங்குகின்றது:
22.     பேதையரே, நீங்கள் இன்னும் எவ்வளவு காலம் உங்கள் பேதைமையில் உழல்வீர்கள்? இகழ்வார் இன்னும் எவ்வளவு காலம் இகழ்ச்சி செய்வதில் மகிழ்ச்சி காண்பர்? முட்டாள்கள் இன்னும் எவ்வளவு காலம் அறிவை வெறுப்புடன் நோக்குவார்கள்?
23.     என் எச்சரிக்கையைக் கவனத்தில் கொள்வீர்களானால், நான் என் உள்ளத்திலிருப்பதை உங்களுக்குச் சொல்வேன்: என் செய்தியை உங்களுக்குத் தெரிவிப்பேன்.
24.     நான் கூப்பிட்டேன், நீங்களோ செவிசாய்க்க மறுத்தீர்கள்: உங்களை அரவணைக்கக் கையை நீட் டினேன்: எவரும் கவனிக்கவில்லை.
25.     என் அறிவுரைகளுள் ஒன்றையும் பொருட்படுத்தவில்லை: என் எச்சரிக்கை அனைத்தையும் புறக்கணித்தீர்கள்.
26.     ஆகையால், உங்களுக்கு இடுக்கண் வரும்போது, நான் நகைப்பேன்: உங்களுக்குப் பெருங்கேடு விளையும்போது ஏளனம் செய்வேன்.
27.     பேரிடர் உங்களைப் புயல் போலத் தாக்கும்போது, இடுக்கண் உங்களைச் சுழற்காற்றென அலைக்கழிக்கும்போது, துன்பமும் துயரமும் உங்களைச் சூழ்ந்து கொள்ளும்போது, நான் எள்ளி நகையாடுவேன்.
28.     அப்பொழுது, நீங்கள் என்னை நோக்கி மன்றாடுவீர்கள்: நான் பதிலளிக்க மாட்டேன்: ஆவலோடு என்னை நாடுவீர்கள்: ஆனால் என்னைக் காணமாட்டீர்கள்.
29.     ஏனெனில், நீங்கள் அறிவை வெறுத்தீர்கள்: ஆண்டவரிடம் அச்சம் கொள்வதில் உங்களுக்கு விருப்பமில்லை
30.     நீங்கள் என் அறி¨வுரையை ஏற்கவில்லை: என் எச்சரிக்கை அனைத்தையும் அவமதித்தீர்கள்.
31.     நீங்கள் உங்கள் நடத்தையின் பயனைத் துய்ப்பீர்கள்: சூழ்ச்சி செய்து நீங்களே சலித்துப் போவீர்கள்.
32.     பேதையரின் தவறுகள் அவர்களையே கொன்றுவிடும்: சிறுமதியோரின் தற்பெருமை அவர்களை அழித்துவிடும்.
33.     எவர் எனக்குச் செவி கொடுக்கின்றாரோ அவர் தீங்கின்றி வாழ்வார்: தீமை வருகையிலும் அச்சமின்றி அவர் மன அமைதியுடன் இருப்பார்.

அதிகாரம் - 2
 


1.     பிள்ளாய்! நீ ஞானத்திற்குச் செவி சாய்த்து, மெய்யறிவில் உன் மனத்தைச் செலுத்தி,
2.     என் மொழிகளை ஏற்று, என் கட்டளைகளைச் சிந்தையில் இருத்திக்கொள்.
3.     ஆம், நீ உணர்வுக்காக வேண்டுதல் செய்து, மெய்யறிவுக்காக உரக்க மன்றாடு.
4.     செல்வத்தை நாடுவதுபோல் ஞானத்தை நாடி, புதையலுக்காகத் தோண்டும் ஆர்வத்தோடு அதைத் தேடு.
5.     அப்பொழுது, ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் இன்னதென்பதை உணர்ந்து கொள்வாய். கடவுளை அறியும் அறிவைப் பெறுவாய்.
6.     ஏனெனில் ஞானத்தை அளிப்பவு¡ ஆண்டவரே, அறிவிற்கும் விவேகத்திற்கும் ஊற்றானவர் அவரே.
7.     நேர்மையாளருக்கு அவர் துணை செய்யக் காத்திருக்கின்றார்: மாசற்றோருக்குக் கேடயமாய் இருக்கின்றார்.
8.     நேர்மையாளரின் பாதைகளை அவர் பாதுகாக்கின்றார்: தம் அடியாரின் வழிகளைக் காவல் செய்கின்றார்.
9.     எனவே, நீ நீதியையும் நியாயத்தையும் நேர்மையையும் நலமார்ந்த நெறிகள் அனைத்தையும் தெரிந்துகொள்வாய்.
10.     ஞானம் உன் உள்ளத்தில் குடிபுகும்: அறிவு உன் இதயத்திற்கு இன்பம் தரும்.
11.     அப்பொழுது, நுண்ணறிவு உனக்குக் காவலாய் இருக்கும்: மெய்யறிவு உன்னைக் காத்துக்கொள்ளும்.
12.     நீ தீய வழியில் செல்லாமலும், வஞ்சகம் பேசும் மனிதரிடம் அகப்படாமலும் இருக்கும்படி, அது உன்னைப் பாதுகாக்கும்.
13.     நேர்மையான வழியை விட்டு விலகி, இருளான பாதையில் நடப்போரின் கைக்கு உன்னைத் தப்புவிக்கும்.
14.     அவர்கள் தீமை செய்து களிக்கின்றவர்கள்.
15.     அவர்களுடைய வழிகள் கோணலானவை. அவர்களுடைய பாதைகள் நேர்மையற்றவை.
16.     ஞானம் உன்னைக் கற்புநெறி தவறியளிடமிருந்தும், தேனொழுகப் பேசும் விலைமகளிடமிருந்தும் விலகியிருக்கச் செய்யும்.
17.     அவள் இளமைப் பருவத்தில் தான் மணந்த கணவனைக் கைவிட்டவள்: தான் கடவுளோடு செய்த உடன்படிக்கையை மறந்தவள்.
18.     அவளது வீடு சாவுக்கு வழிகாட்டிக்கொண்டிருக்கின்றது: அவளின் வழிகள் இறந்தோரிடத்திற்குச் செல்கின்றன.
19.     அவளிடம் செல்லும் எவனும் திரும்பி வருவதேயில்லை: வாழ்வெனும் பாதையை அவன் மீண்டும் அடைவதில்லை
20.     எனவே, நீ நல்லாரின் நெறியில் நடப்பாயாக! நேர்மையாளரின் வழியைப் பின்பற்றுவாயாக!
21.     நேர்மையாளரே உலகில் வாழ்வர்: மாசற்றாரே அதில் நிலைத்திருப்பர்.
22.     பொல்லாரோ உலகினின்று பூண்டோடு அழிவர்: நயவஞ்சகர் அதனின்று வேரோடு களைந்தெறியப்படுவர்.

அதிகாரம் - 3 
 

1.     பிள்ளாய்! என் அறிவுரையை மறவாதே: என் கட்டளைகளை உன் இதயத்தில் இருத்திக்கொள்:
2.     அவை உனக்கு நீண்ட ஆயுளையும் பல்லாண்டு வாழ்வையும் நிலையான நலன்களையும் அளிக்கும்.
3.     அன்பும் வாய்மையும் உன்னிடம் குன்றாதிருப்பதாக! அவற்றைக் கழுத்தில் அணிகலனாய்ப் பூண்டுகொள்.
4.     அப்பொழுது, நீ கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவனாவாய்: அவர்களது நல்லெண்ணத்தையும் பெறுவாய்.
5.     முழு மனத்தோடு ஆண்டவரை நம்பு: உன் சொந்த அறிவாற்றலைச் சார்ந்து நில்லாதே.
6.     நீ எதைச் செய்தாலும் ஆண்டவரை மனத்தில் வைத்துச் செய்: அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செம்மையாக்குவார்.
7.     உன்னை நீ ஒரு ஞானி என்ற எண்ணிக்கொள்ளாதே: ஆண்டவருக்கு அஞ்சித் தீமையை அறவே விலக்கு.
8.     அப்பொழுது உன் உடல், நலம் பெறும்: உன் எலும்புகள் உரம் பெறும்.
9.     உன் செல்வத்தைக்கொண்டு அவரைப் போற்று: உன் விளைச்சல்கள் எல்லாவற்றின் முதற்பலனையும் ஆண்டவருக்குக் காணிக்கையாக்கு.
10.     அப்பொழுது உன் களஞ்சியங்கள் நிறைந்திருக்கும்: குடங்களில் திராட்சை இரசம் வழிந்தோடும்.
11.     பிள்ளாய்! ஆண்டவர் உன்னைக் கண்டித்துத் திருத்துவதை வேண்டாமென்று தள்ளி விடாதே: அவர் கண்டிக்கும்போது அதைத் தொல்லையாக நினையாதே.
12.     தந்தை தன் அருமை மகனை கண்டிப்பதுபோல், ஆண்டவர் தாம் யாரிடம் அன்புகொண்டிருக்கின்றாரோ அவர்களைக் கண்டிக்கின்றார்.
13.     ஞானத்தை தேடி அடைந்தோர் நற்பேறு பெற்றோர்: மெய்யறிவை அடைந்தோர் நற்பேறு பெற்றோர்:
14.     வெள்ளியை விட ஞானமே மிகுநலன் தருவது: பொன்னைவிட ஞானத்தால் வரும் செல்வம் மேலானது.
15.     ஞானம் பவளத்தைவிட விலைமதிப்புள்ளது: உன் அரும்பொருள் எதுவும் அதற்கு நிகராகாது.
16.     அதன் வலக்கை நீடித்த ஆயுளை அருள்கின்றது. அதன் இடக்கை செல்வமும் மேன்மையும் கிடைக்கச் செய்கின்றது.
17.     அதன் வழிகள் இன்பம் தரும் வழிகள்: அதன் பாதைகள் யாவும் நலம் தருபவை.
18.     தன்னை அடைந்தோர்க்கு அது வாழ்வெனும் கனிதரும் மரமாகும்: அதன¨ப் பற்றிக்கொள்வோர் நற்பேறு பெற்றோர்.
19.     அண்டவர் ஞானத்தால் பூவுலகிற்கு அடித்தளமிட்டார்: விவேகத்தால் வானங்களை நிலைபெறச் செய்தார்.
20.     அவரது அறிவாற்றலால் நிலத்தின் அடியிலிருந்து நீர் பொங்கி எழுகின்றது: வானங்கள் மழையைப் பொழிகின்றன.
21.     பிள்ளாய்! விவேகத்தையும் முன்மதியையும் பற்றிக்கொள்: இவற்றை எப்போதும் உன் கண்முன் நிறுத்தி வை.
22.     இவை உனக்கு உயிராகவும், உன் கழுத்துக்கு அணிகலனாகவும் இருக்கும்.
23.     நீ அச்சமின்றி உன் வழியில் நடப்பாய்: உன் கால் ஒருபோதும் இடறாது.
24.     நீ படுக்கப்போகும் போது உன் மனத்தில் அச்சமிராது: உன் படுக்கையில் நீ அயர்ந்து பங்குவாய்.
25.     பொல்லார் திகிலடைவதையும் அவர்களுக்கு அழிவு வருவதையும் காணும்போது நீ அஞ்சாதே.
26.     ஆண்டவர் உனக்குப் பக்கத்துணையாய் இருப்பார்: உன் கால் கண்ணியில் சிக்காதபடி உன்னைக் காப்பார்.
27.     உன்னால் நன்மை செய்யக் கூடுமாயின், தேவைப்படுபவர்க்கு அந்த நன்மையைச் செய்ய மறுக்காதே.
28.     அடுத்திருப்பார் உன்னிடம் கேட்கும் பொருளை நீ வைத்துக் கொண்டே, “போய் வா, நாளைக்குத் தருகிறேன்“ என்று சொல்லாதே.
29.     அடுத்திருப்பார்க்கு தீங்கிழைக்கத் திட்டம் தீட்டாதே: அவர்கள் உன் அருகில் உன்னை நம்பி வாழ்கின்றவர்கள் அல்லவா?
30.     ஒருவர் உனக்கு ஒரு தீங்கும் செய்யாதிருக்கும்போது, அவரை வீண் வாதத்திற்கு இழுக்காதே.
31.     வன்முறையாளரைக் கண்டு பொறாமை கொள்ளாதே: அவர்களுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றாதே.
32.     ஏனெனில், நேர்மையற்றோரை ஆண்டவர் அருவருக்கின்றார்: நேர்மையாளரோடு அவா உறவுகொள்கின்றார்.
33.     பொல்லாரது வீட்டின்மேல் ஆண்டவரது சாபம் விழும்: அவருக்கு அஞ்சி நடப்போரின் உறைவிடங்களில் அவரது ஆசி தங்கும்.
34.     செருக்குற்றோரை அவர் இகழ்ச்சியுடன் நோக்குவார்: தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார்:
35.     ஞானமுள்ளவர்கள் தங்களுக்குரிய நன்மதிப்பைப் பெறுவார்கள்: அறிவிலிகளோ இகழப்படுவார்கள்.                 

                                                                                                                     ( தொடரும்...)

Saturday, August 29, 2015

காதல் வந்தது...

காதல் வந்தது...

                
                          ''இளவேனிற் கால பஞ்சமி..
                           அவள் வானில் வந்த பௌர்ணமி..
                           சித்திர வானம் சித்திரம் தீட்டிடும் மேகம்
                           ஒரு பத்தரை மாத்து தங்க நிலாவைச் சந்தித்தேன்.
                           எங்கள் பார்வை நின்று போனது  வானம் பூமி என்ன ஆனது?''
                                                                                                                          - அறிவுமதி      

காதல் ;
              
                காதல் என்பதற்கு நேசிப்பது, அன்பு செலுத்துவது என்று பொருள் கொள்ளலாம். வாலிப பருவத்தில் இருக்கும் ஒரு ஆண் வாலிப பருவத்தில் இருக்கும் ஒரு பெண் மீது காதல் கொள்வதும், வாலிப பருவத்தில் இருக்கும் ஒரு பெண் வாலிப பருவத்தில் இருக்கும் ஒரு ஆணை விரும்புவதும் உலக வழக்கம்.  

             காதல் மட்டும் ஒருவருக்கு சரியாக அமைந்துவிட்டால் இந்த பிரபஞ்சம் அவருக்கு சொர்க்கமாக காட்சியளிக்கும். மனது மென்மையாக மாறிவிடும். தன் காதலுக்காக எதையும் சாதிக்கும் ஆற்றல் கிடைக்கும். அத்தகைய ஆழமான உண்மையான காதல் முறிந்துவிட்டால் உலகமே இருளாகத் தெரியும். அந்த விரக்த்தியிலும் வழியிலும் இருந்து மீண்டு எழுவது கடினம்.

             
              காதலிப்பதற்காக மட்டுமா பிறந்தோம்? காதல் மட்டுமா வாழ்க்கை? இந்த உலகில் நாம் பிறவி எடுத்ததற்கு காரணம் காதலித்து காதலில் தோல்வி அடைந்து விரக்த்தியில் உயிரைவிடும் நோக்கத்திற்காகவா?

                     என்று பலர் அறிவுரை புகட்டியும் சில தோல்வியுற்ற காதலர்கள் தற்கொலை செய்து கொள்வதுண்டு, சிலர் திருமணமே செய்து கொள்ளாமல் காதலர் நினைவிலேயே வாழ்வதுண்டு, மேலும் சிலர் மனநோயாளியாக மாறுவது என காதல் தொல்வியுற்றவர்களின் வாழ்க்கையில் பல மாற்றங்களை பார்க்க முடிகின்றது.   

                   தாய், தந்தை, சகோதிர சகோதிரிகள், நண்பர்கள், சொந்த பந்தம் என்பவை அனைத்தும் நாம் பிறந்து குழந்தையாக இருக்கும் போதிலிருந்தே நம் கூடே வருவனவாகும். வாலிப வயதில் ஒரு ஆணிற்கு ஒரு பெண்மீது வரும் இனம்புரியாத அன்பே காதலாகும். தான் பிறந்தது முதல் இதுவரை அனுபவிக்காத ஒரு சுகமான புதுவித உறவு காதல். உள்ளத்தாலும் உடலாலும் இணைந்து நெடுந்தூரம் பயணிக்க வைக்கும் உறவு காதல். தன்  இன்ப துன்பங்கள், கஷ்ட்ட நஷ்ட்டங்களை மனதார பகிர்ந்து கொள்ள உதவும் உன்னத உறவு காதல். என உணரும் போது காதல் தோல்வியில் துயரம் இருக்கத்தான் செய்யும். 

வாழ்க்கையின் மீது காதல் வந்தது :

                   அறிவுள்ள சிலரோ சோதனைகளை மனதின் ஓர் ஓரத்தில் வைத்து விட்டு தன் தாய் தந்தை குடும்பம் இவற்றை எண்ணிப்பார்த்து சூழ்நிலையால் சில மாற்றங்களை அடைந்து தன் வாழ்க்கைக்கு தேவையான துணையை மணமுடித்து குழந்தைகளுடன்  மகிழ்ச்சியாக வாழ்வதுண்டு.

 
            உலகம் அழகானது அமைதியானது இந்த உலகத்தை நாம் நேசித்தோமானால் இந்த உலகமே நம்மை நேசிக்கும். ஒவ்வொரு நாளும் இயற்கையோடு உறவாடி உயிகளிடத்தில் அன்பு செலுத்தி வாழ்வோம். இறைவன் நமது கர்ம வினைப்பயனாக நாம் வாழ்வதற்குக் கொடுத்த இந்த வாழ்க்கையின் மீது காதல் கொள்வோம். 

ஜோதிடமும் காதல் யோகமும் ; 

                ஜாதக ரீதியாக காதலை குறிக்கும் வீடு 5 ஆம் வீடு. காதலுக்குரிய கிரகம் சுக்கிரன். மனதிற்குரிய கிரகம் சந்திரன்.  இடத்திற்கும் கிரகங்களுக்கும் வலிமையை கூட்டும் கிரகம் குரு. இவர்களின் நிலையை அறிந்தே ஒருவருக்கு காதல் எப்போது வரும்? எந்த மாதிரி நபருடன் காதல் வரும்? காதல் வெற்றி பெறுமா? தோல்வி பெறுமா? திருமணம் எப்போது நடக்கும்? நிச்சியத்த திருமணமா? அல்லது காதல் திருமாணமா? என்பதனை அறிய முடியும்.


               ஒருவர் ஜாதகத்தில் 5 ஆம் அதிபர் 7 ல் இருந்தாலோ அல்லது 7 ஆம் அதிபர் 5 ல் இருந்தாலோ காதல் ஏற்படும். காதல் திருமணமே நடக்கும். சுக்கிரன் ஆட்சி, உச்சம் பெற்று குரு பார்வையை பெற்று இவர்களின் தொடர்பு 5 அல்லது 7 வீட்டிற்கு இருந்தால் காதல் ஏற்படும். 2 அல்லது 5 ல் சந்திரன் இருந்தால் காதல் உண்டாகும். 

               5 ஆம் அதிபர் மறைவு, சுக்கிரன் நீசம், 7 ஆம் வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட தீய கிரகங்கள் காணப்பட்டால் காதல் தோல்வி அடையும். காதல் செய்ய துவங்கும் போது நடுப்பு தசா புத்தியும் கொட்ச்சார கிரக அமைப்பும் பார்த்து காதல் செய்வது முக்கியம். கேது தசை அல்லது ராகு புத்தி, சனி புத்தி, ஏழரைச்சனி காலங்களில் காதல் ஆரம்பம் ஆகக்கூடாது. அப்படி ஆரம்பித்தால் அந்த தீய தசா புத்தி முடியும் பொது காதலும் முடிந்துவிடும்.

         

             

Friday, August 28, 2015

மீன ராசியில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள்

மீனம் : 




            மீன ராசியை ஜென்ம ராசியாகக்கொண்டு பிறந்தவர்கள் சத்தியம் தவறாதவர்கள். யாருக்கும் தீங்கு எண்ணாதவர்கள். இளமையில் இளைத்த தேகத்துடனும் பின்பு திடகாத்தியமான உடலமைப்பையும் பெறுவார்கள். கல்வியில் அதிக மதிப்பெண்கள் பெறுவர். அனைவரிடமும் மனம் விட்டு வெளிப்படையாக பழகக்கூடியவர்கள்.

             இவர்கள் பின்னால் வருவதனை நினைத்துப் பார்த்து மிகவும் எச்சரிக்கையாக வாழக்கூடியவர்கள். வருங்காலத்திற்கு தேவையானதை இப்போதே செய்து வருவார்கள். விடாமுயற்சியுடன் எந்த ஒரு செயலையும் செய்து முடிப்பார்கள். தாய், தந்தை, சகோதிர சகோதிரிகள் மீது அதிகமான பாசம் வைத்திருப்பார்கள். 

           குரு ராசி அதிபராக வருவதனால் கடவுளின் ஆசியும் உயர்ந்த பதவியும் நல்ல ஞானமும் கிட்டும். உதவி செய்தோரை ஒருபோதும் மறவாத குணம் கொண்டு அனைவருக்கும் நல்லதே செய்யக்கூடிய அமைதியானவர்கள் மீன ராசிக்காரகள்.

          பூரட்டாதி 4 ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மீன ராசிக்காரர்கள் ஆவர்.   

கும்ப ராசியில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள்

கும்பம் : 




                  கும்ப ராசியை ஜென்ம ராசியாகக்கொண்டு பிறந்தவர்கள் கல்வியில் ஊக்கமும் தெய்வ வழிபாடுகளில் நாட்டமும் ஒழுக்கமாகவும் இருப்பார்கள். இவர்கள் சில நேரங்களில் தற்பெருமை கொண்டு பேசக்கூடியவர்களாக இருப்பார். தன்னை அளவுக்கு அதிகமாக நேசிப்பதனால் தற்பெருமை இயல்பாக வரும்.

                 கும்ப ராசிக்காரர்களுக்கு பெண்களின் உதவி ஆதிகம் இருக்கும். சனி ஆள்வதால் கடினமாக உழைக்கும் திறனைப் பெற்றிருப்பார்கள். இவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத்துணை நல்ல அறிவாற்றல் மிக்கவராகவும். சிறந்த குணநலன்களை உடையவர்களாகவும் இருப்பர். 

                புகழ், பெருமை இவர்களை தேடி வரும். பேச்சில் சாமார்த்தியமும் செயலில் ஆழ்ந்த கவனமும் கொண்ட இவர்கள் சிறிது கோவக்காரர்களாகவும் சண்டை இடுதலில் பிரியம் கொண்டவர்களாகவும் திகழ்வர். இடம் பொருள் ஏவல் பார்த்து எதையும் செய்து ஜெயிக்கக்கூடியவர்கள்.

             அவிட்டம் 3, 4 ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 ஆம் பாதங்களில் பிறந்தவர்கள் கும்பராசிக்காரர்கள் ஆவர்.    

மகர ராசியில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள்

மகரம் : 




                  மகர ராசியை ஜென்ம ராசியாகக்கொண்டு பிறந்தவர்கள் நீண்ட உயர்ந்த கம்பீரமான உடல் அமைப்பையும் உடம்பில் மச்சங்களையும் பெற்று காணப்படுவர். படிப்பில் தேர்ச்சியும் கஷ்ட்டப்பட்டு படிப்பவர்கலாகவும் இருப்பர். ஆடை ஆபரணங்களில் பிரியமும் சுத்தம் சுகாதாரத்துடனும் இருக்க விருப்புவர்.

                இவர்கள் பிறந்ததற்கு அடுத்து இவர்களது குடும்பம் செல்வம் செல்வாக்குடன் புகழ் பெற்று வளர தொடங்கி இருக்கும். தன் விருப்பம் போல் வாழக்கூடியவர்களாகவும் மனைவி மக்கள் மீது அதிக பிரியத்துடனும் இருப்பார்கள்.

                  சனி ராசி அதிபதியாக வருவதனால் நீதி நேர்மையை கடைப்பிடித்து வாழ்வார்கள். முதல் 30 ஆண்டுகள் கொஞ்சம் கஷ்ட்டங்கள் இருந்தாலும் பின் வருகாலங்களில் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைவார்கள். குடும்பத்திற்கு இறை அருளும் சந்தோசமும் நிறைந்து இருக்கும்.

              உத்திரட்டாதி 2, 3, 4 ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2, ஆம் பாதங்களில் பிறந்தவர்கள் மகர ராசிக்காரர்கள் ஆவர். 

தனுசு ராசியில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள்

தனுசு : 




                தனுசு ராசியை ஜென்ம ராசியாகக்கொண்டவர்கள் சிறுவயது முதலே பெரியவர்கள் போன்று நடந்துகொள்வர். தத்துவம் பேசுவது பிறருக்கு அறிவுரை புகட்டுவது போன்றவற்றுள் தனுசு ராசிக்காரர்கள் திறமைசாலிகள். நல்ல கல்வியையும் ஒழுக்கத்தையும் பெற்று ஞானி போன்று நடந்துக்கொள்வார்கள்.

             தெய்வீக வழிபாடுகளும் பெரியோரிடத்தில் பக்த்தியும் கொண்ட இவர்கள் கீழோர் மேலோர் எனும் பாகுபாடின்றி பழகக்கூடியவர்கள்.சதா சஞ்சாரம் (அதிக பயணம்) நிறைந்ததாக வாழ்கை இருக்கும். குரு அதிபதியாக வருவதனால் சிறந்த குணநலன்களை பெற்று உயர் பதவியை வகிர்க்கக்கூடியவர்கள். சிறிது காலம் பெரும் சிரமங்களுக்கு ஆட்பட்டு பிறகு வெற்றி காண்பார்கள்.

           மாதா, பிதா, ஆசிரியரை வணங்கக்கூடிய இவர்கள்  செல்வம் செல்வாக்கினை பெற்று வாகன யோகத்துடன் மகிழ்ச்சியாக வாழக்கூடியவர்கள். 

        மூலம், பூராடம், உத்திராடம் 1 ஆம் பாதங்களில் பிறந்தவர்கள் தனுசு ராசியினர் ஆகும். 

Thursday, August 27, 2015

விருச்சிக ராசியில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள்

விருச்சிகம் : 
       
                 விருச்சிக ராசியை ஜென்ம ராசியாகக்கொண்டு பிறந்தவர்கள் எடுத்த காரியத்தை திறம்பட செய்து முடித்து வெற்றி காண்பவர்கள். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் சுறுசுறுப்புடன் செயல்படக்கூடியவர்கள். அஞ்சா நெஞ்சமும் திடகாத்தியமான உடலமைப்பும் இருக்கும்.

                 இவர்கள் தன்  வேலைக்காக தந்திரங்களை பின்பற்றுவார்கள். வாழ்க்கை சண்டை சச்சரவுகள் நிறைந்து காணப்படினும் அவற்றுக்கெல்லாம் இவர்கள் கலங்க மாட்டார்கள். எதிரிகளை சூறையாடுவதில் வல்லவர்கள். விருச்சிக ராசியினர் மனைவியை மதிப்பவர்களாகவும் மனைவிக்கு பிடித்தவர்களாகவும் இருப்பர்.

             செவ்வாய் அதிபதியாக வருவதால் சுரங்கம், ராணுவம், காவல் துறைகளில் பெரிதும் பணிபுரிவார்கள். காதல் உணர்வு கொண்டு நினைத்தவரையே கரம் பிடிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். இவர்களிடம் பழகுவது கடினம் ஆயினும் பழகிய பிறகு விடமாட்டார்கள்.

           விசாகம் 4, ஆம் பாதம், அனுஷம், கேட்டை நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் விருச்சிக ராசியினர் ஆவர்.    
 

துலாம் ராசியில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள்

துலாம் :




           துலாம் ராசியை ஜென்ம ராசியாகக்கொண்டு பிறந்தவர்கள் நல்லது கேட்டது நீதி நேர்மை அறிந்து துல்லியமாக செயல்படக்கூடியவர்கள். பணம், சொத்து சுகம், கால்நடை விருத்தி, நல்ல வீடு, நிலபுலன்களை பெற்று சந்தோசமாக வாழக்கூடியவர்கள். இவர்களது குடும்பம் பெரிய குடும்பமாக இருக்கும்.

             ஒரு சிறந்த தலைவனுக்குரிய அனைத்து பண்புகளும் இவர்களிடத்தில் ஒருங்கே காணப்படும். பேச்சில் வல்லவர்கள். ஆணித்தரமாக பேசி முடிப்பவர்கள். தெய்வீக பக்தி கொண்டு சாஸ்த்திர சம்பிரதாயங்களை கடைப்பிடித்து வாழக்கூடியவர்கள்.

           ஆசிரியர், நீதிபதி, வழக்கறிஞர், கலைஞர், அரசியல் தலைவர் போன்ற பதவிகளை வகிக்கக்கூடியவர்கள். மற்றவர் விவகாரங்களில் தலையிட விரும்பாதவர்கள். வியாபார நோக்குடன் செயல்படக் கூடியவர்கள். பசி தான்காதவர்கள்.

         சித்திரை, 3, 4, ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3, பாதங்களில் பிறந்தவர்கள் துலாராசிக்காரர்கள் ஆகும். 

கன்னி ராசியில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள்

கன்னி :



           கன்னி ராசியை ஜென்ம ராசியாகக்கொண்டு பிறந்தவர்கள் நீதி, நேர்மை, உண்மை என வாழக்கூடியவர்கள். கடவுள் பக்தி மிகுந்தவர்கள். காதல் வயப்படக்கூடியவர்கள். இளம் வயதில் வறுமையால் வாடினாலும் பிற்பாதி வயதில் செல்வ செழிப்புடன் வாழக்கூடியவர்கள். தாயின் மீது அளவுகடந்த பாசம் கொண்டவர்கள்.

             சேவை மனப்பான்மை மிகுந்து தர்ம குணத்துடன் திகழ்வார்கள். தங்களால் பயனடைந்தவர்கள் ஏராளம். அன்புடன் பேசுவது, பெரியோர்களிடத்தில் மரியாதை நண்பர்களுக்காக எதையும் செய்யக்கூடிய குணம் கொண்டவர்கள். சில நேரங்களில் கூட்டங்களில் பேசுவதற்கு தயக்கமும் பதட்டமும் காணப்படும்.

           கன்னி ராசிக்கு அதிபதியாக புதன் வருவதால் நன்கு படித்தவர்களாகவும் நகைச்சுவை உணர்வு நிறைந்தவர்களாகவும் இருப்பர். இவர்கள் பிறரிடம் பணி செய்ய விரும்பாது சொந்தமாக தொழில் செய்து முன்னுக்கு வருபவர்கள்.

           உத்திரம் 2, 3,4, ஆம் பாதங்கள், ஹஸ்தம், சித்திரை ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் கன்னி ராசிக்காரர்கள் ஆவர். 

சிம்ம ராசியில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள்

சிம்மம் :
                     
             சிம்ம ராசியை ஜென்ம ராசியாகக் கொண்டு பிறந்தவர்கள் தனித்து திறியும் தைரியசாலிகள். இவர்கள் யாருடனும் அதிகம் வைத்துக்கொள்ள மாட்டார்கள். அதே போன்று யார் பேச்சையும் கேட்க மாட்டார்கள். தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை துணிச்சலாக செய்வார்கள். 

            வாக்கு வன்மையும், தெய்வ வழிபாடும் நிறைந்தவர். சூரியன் அதிபதியாக உள்ளதால் அரசு துறையிலும் அரசியலிலும் சிறந்து விளங்குவார்கள். யாருக்கும் அடிபணிய மாட்டார்கள். யாருக்கும் கெடுதல் செய்ய மாட்டார்கள்.ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் காணப்படுவார்கள். உயர்ந்த அந்தஸ்து பதவி வகுத்து பலரையும் வழிநடத்தக்கூடியவர்கள்.

            கோபம் வந்தால் கொடூரமாக மாறக்கூடியவர்கள். சமூகத்தில் நற்கீர்த்தியுடனும் சொத்து சுகங்களுடனும் விளங்குவார்கள். நல்ல சிவந்த நிறத்தையும் கம்பீரமான உடல் தோற்றத்தையும் உடையவர்கள்.

           மகம், பூரம், உத்திரம் 1 ஆம் பாதம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சிம்ம ராசிக்காரகள் ஆவர்.    

கடக ராசியில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள்

கடகம் :

    


               கடகத்தை ஜென்ம ராசியாகக்கொண்டு பிறந்தவர்கள் கற்பனை ஆற்றல் மிக்கவர்களாகவும் இழகிய மனம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். தாய் தந்தை மீது அளவற்ற பாசத்துடன் காணப்படுவர். சினிமா, அரசியல், பொதுப்பணி போன்றவற்றுள் இடம் பதிப்பர். மற்றவர்களுக்கு கடினமாகத் தோணும் காரியங்கள் அனைத்தும் கடக ராசியினருக்கு தூசியாகத் தெரியும்.

             தான் எடுத்துக்கொண்ட வேலை முடியும் வரை எதை பற்றியும் கவலைப்பட மாட்டார்கள். பொது சேவையும் இறக்க குணமும் கருணை மனதும் கொண்டு மற்றவர்களுக்கு உதவிடுவார்கள்.

           கடக ராசியினருக்கு பெண்களால் பல ஆதாயங்கள் வந்து சேரும். பெருந்தன்மை கொண்டு செல்வ செழிப்புடன் உலகம் போற்ற வாழ்வார்கள். சந்திரனின் சொந்த வீடாக கடகம் இருப்பதனால் கற்பனை திறன் மிகுந்த துறைகளில் ஜொழிப்பார்கள். பேச்சு இனிமையாகவும் குளிமையாகவும் இருக்கும்.

           புனபூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் கடக ராசியினர் ஆவர்.

            

மிதுன ராசியில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள்

மிதுனம் :

           மிதுன ராசியை ஜென்ம ராசியாகக்கொண்டு பிறந்தவர்கள் எப்போதும் சிரித்த முகத்துடனும் பேசுவதில் வல்லமையும் கணிதத்தில் புலமையும் பெற்று காணப்படுவார்கள். அடிக்கடி எண்ணங்களை மாற்றுபபவர்களாகவும் இரட்டை செயல்களை உடையவர்களாகவும் இருப்பார்.

         எழுதுவதில் நாட்டமும் ஜோதிட சாஸ்திரங்களில் நம்பிக்கையும் உடையவர்கள். நல்ல ஒழுக்கத்தையும் புகழையும் பெற்று தன் சொந்த உழைப்பால் முன்னேரக்கூடியவர்கள். கலைத்துறை, நடிப்பு, நகைச்சுவை போன்றவற்றில் ஆர்வமும் தேர்ச்சியும் இருக்கும். சமுதாயத்தில் கண்டிப்பும் கண்ணியமும் நிறைதவர்களாக திகழ்வார்கள்.

          எந்த ஒரு செயலையும் தைரியமாக செய்யக்கூடியவர்கள் இவர்கள்.புதன் அதிபதியாக வருவதனால் நல்ல கல்வியை பெற்று நிபுணத்துவமான அறிவை பெற்றவர்கள் இந்த ராசிக்காரர்கள். சில நேரங்களில் சுயநலம் மிகுந்தும் கபடத்தனம் கொண்டும் காணப்படுவர்.

         மிருகசீரிடம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 பாதங்களில் பிறந்தவர்கள் மிதுன ராசிக்காரர்கள் ஆகும்.

ரிஷப ராசியில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள்

ரிஷபம் ; 
            ரிஷப ராசியை ஜென்ம ராசியாகக்கொண்டு பிறந்தவர்கள் பக்தி சிரத்தையுடன் காணப்படுவர்.சந்திரன் இங்கு உச்சம் பெறுவதால் கற்பனை வளம் நிறைந்தவர்களாகவும் கலை உணர்வு கொண்டவர்களாகவும் இருப்பர். தன்னை அலங்கரித்துக் கொள்வதிலும் வீடு இருப்பிடத்தை சுத்தமாக வைத்துக்கொள்வதிலும் இவர்கள் திறமைசாலிகள். 

             குழந்தைகளிடத்தில் பாசமாகவும் பிரியமாகவும் நடந்துக்கொள்வார்கள். செல்வ வசதி வாய்ப்புகளைப் பெற்று மகிழ்ச்சியாக வாழக்கூடியவர்கள். சில நேரங்களில் சிறிது முன் கோபமும் பய உணர்வும் வந்து போகும். வாலிப பருவத்தில் இருப்பவர்களுக்கு சிற்றின்ப ஆசைகள் வந்து போகும்.

            ராசி அதிபதி சுக்கிரன் என்பதால் காதலில் வெற்றியும் நல்ல வாழ்க்கை துணையும் அமையும். எதையும் கலை உணர்வுடனும் செய்யக்கூடியவர்களாக இருப்பர். 

            கிருத்திகை 2, 3, 4, ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரிஷப ராசிக்காரர்கள்.

மேஷ ராசியில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள்


மேஷம் :

                  மேஷ ராசியை ஜென்ம ராசியாகக்கொண்டு பிறந்தவர்கள் துணிச்சல் மிக்கவர்கள். அதிகாரம் உடையவர்கள். பார்ப்பதற்கு கம்பீரமான தோற்றத்துடன் சில சமயங்களில் கோப குணத்துடனும் காணப்படுவார்கள். பேச்சில் நேர்மையும் உண்மையும் இருக்கும். படிப்பில் தேர்ச்சியும் ஆடை ஆபரண விருத்தியும் இருக்கும். 

                    இளம் வயதில் உடல் மெலிந்தும் இளைத்தும் காணப்படும். வயது ஆக ஆக தோற்றத்தில் அழகும் பொழிவும் கூடும். இவர்கள் நீண்ட ஆயுள் பலத்துடன் சமுதாயத்தில் நல்ல மதிப்பு மரியாதை பெற்று வாழ்வார்கள். பிறருக்கு அடிமையாகவோ அடிபணிந்தோ இருக்க விரும்பாதவர்கள்.
 
                   மேஷ ராசிக்கு செவ்வாய் அதிபதியாக வருவதால் மேஷ ராசிக்காரர்கள் பெரும்பாலும் சவால் நிறைந்த பணிகளில் எளிதாக இறங்குவார்கள். இராணுவம், காவல் துறை,  தீயணைப்புத் துறை, விமானப்படை, கப்பல் படை, மருத்துவ துறை பேன்ற துறைகளில் மேஷ ராசிக்காரர்கள் அதிகம் காணப்படுவர்.

                     அஸ்வினி, பரணி, கிருத்திகை 1 ஆம் பாதம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேஷ ராசிக்காரர்கள் ஆவர். 

ஜோதிடவியல் ஓர் ஆய்வு - பகுதி 2


அறிவியலும் ஜோதிடமும் ; 
  
             அறிவியல் வல்லுநர்களால் இன்று மக்களுக்குப் பயனுள்ள பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளும் பயன்பாட்டுச் சாதனங்களும் பரவி வருகின்றன.  அதற்கு ஏற்றாற்போல் ஜோதிட வல்லுநர்களும் ஜோதிடக் கலையையும் நவீன உலகிற்கு ஏற்றார்போல் ஆராய்ந்து வருகின்றனர்.

           அறிவியல் அறிஞர்கள் கணினியைக் கண்டறிந்தனர் . ஜோதிட வல்லுநர்கள் கணினிக்கு உரிய கிரகம் சுக்கிரன் என்பதனைக் கண்டறிந்தனர். மருத்துவர்கள் அறுவை சிகிட்சை முறையைக் கண்டறிந்தனர். ஜோதிட அறிஞர்கள் அறுவை சிகிட்சைக்கு உரிய கிரகம் செவ்வாய் என்பதனைக் கண்டறிந்தனர்.

          இவ்வாறு ஜோதிடம் இவ்வுலகிற்குத் தகுந்தார் போல் மாறிக்கொண்டு வருகிறது.   

ஜோதிடத்தின் வளர்ச்சி;

               சித்தர்களால் கண்டறியப்பட்ட ஜோதிடக்கலை இன்று பெரும் வளர்ச்சி நிலையை அடைந்துள்ளது. உலகம் முழுவதும் ஜோதிடம் போற்றப்படுவதனை நம்மால் காண முடிகின்றது. தமிழகத்தில் பல்வேறு பல ஜோதிடம் கற்பிக்கபப் படுகின்றது. குறிப்பாக அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகங்கள் ஜோதிடம் சார்ந்த படிப்புகளை வழங்கி பட்டங்களை வழங்குகிறது.
 

தெய்வீகக்கலை ;

             மானிடர்களின் துயர் நீக்கி, வழிகாட்டி, காலக்கண்ணாடியாக விளங்கும் தெய்வீகக் கலையாக ஜோதிடக்கலை போற்றப்படுகிறது. ஜோதிடம் என்னும் இறை தொண்டினை செய்து ஜீவனம் நடத்திடும் ஜோதிடர்களின் பங்கு இன்றியமையாதது. ஜோதிடத்தை தாண்டியும் ஒரு சக்தி இருக்கிறது. 

             இறைவன் நமது பூர்வ ஜென்ம பயன்கள் அடிப்படையில் நமது விதியை நிர்ணயித்துள்ளான். எதுவும் சில காலம். அவனின்றி ஓர் அணுவும் அசையாது.   

ஜோதிடவியல் ஓர் ஆய்வு - பகுதி 1

                 குறித்திடுக ஜாதக மென்பதவரவர் தம் வினையின் 
                 குணங்களறிந்தயன் விதித்த கொள்கை யுளதன்றே 
                 மறித்தமரவர் தமக்கு வரும் பல பாவகத்தின் 
                 வகையறிந்து முன்னோர்கள் வழுதிச் சொல்லதனை 
                 பிரித்தறிந்து சுபம் வருமென்றுள மகிழ்ச்சிப் பொங்க 
                 பின்ன சுபம் வருதலிற்கு ப்ரீதியென கொலேன்று 
                 நெறி தரும் சாஸ்திரத்தின் விதி சாந்தி செய்தே 
                 நிறைந்த சுபம் பெறுவதற்கே நிகழ்த்தினர் ஜாதகமே. 

ஜோத்யிடக்கலையின் தொன்மை ;

                 ஜோதிடக் கலை மிகவும் பழமை வாய்ந்தக் கலை. ஜோதிடத்திற்கு வானசாஸ்திரம் என்னும் மறுபெயரும் உண்டு. சங்க காலத்தில் வாழ்ந்த சித்தர்கள் என்னும்  விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்ட அறிய கலைகளில் ஜோதிடக்கலையும் ஒன்று. நம் அறிவியல் அறிஞர்களால் சொல்லப்பட்ட சூரியன், சூரியனைச் சுற்றியுள்ள கோள்கள் இவை யாவும் தனி மனிதனின் இயக்கத்திற்கும் உதவுகின்றன என்பதனை சித்தர்கள் முன்கூட்டியே நிரூபித்துக்காட்டினர்.

               ஒரு மனித உயிரின் பிறப்பு, இறப்பு, வாழ்நாளின் இடையில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வுகள்  இவை யாவும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டவை. மனித உயிர்களின் பூர்வபுனரெதிர் ஜென்மங்களை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியும் என்று சித்தர்களும் பழம்பெரும் ஜோதிடர்களும் கூறியுள்ளனர். இதற்காக ஜோதிடக்கலையைப் பயன்படுத்தினர். கம்பராமாயணம், மகாபாரதம், மணிமேகலை என்னும் தொன்மை வாய்ந்த புராணங்களின் வாயிலாகவும் ஜோதிடம் சம்பந்தமான செய்திகளைப் பார்க்க முடிகின்றது. எனவே ஜோதிடம் என்பது மிகவும் தொன்மை வாய்ந்தக் கலை என்பதை உணர முடிகின்றது.

விதியின் பங்கு ;  

             மனிதன் செய்கின்ற எந்த ஒரு செயல்களிலும் விதியின் பங்கு இருக்கின்றது. மனது எதற்காக ஆசைப்படுகிறதோ, எதை அடைய ஏங்குகிறதோ, எதைச் செய்யத் துணிகிறதோ என்று பார்க்கும் பொழுது மனதில் ஒர் விருப்பம் எழுகிறது என்றால் அது மனிதனின் மனதைச் சுற்றியுள்ள நவகிரகங்களால் ஏற்படுத்தப்படும் தூண்டல் ஆகும். நாம் ஒரு செயலைச் செய்கின்றோமானால் அச்செயல் நன்மையில் முடியும் அல்லது தீமையில் முடியும். நேரம் நல்லதாக இருந்தால் அச்செயலும் நன்மையில் முடியும். நேரம் தீயதாக இருந்தால் அச்செயலும் தீமையில் முடியும்.

            எனவே மனிதனின் வாழ்க்கையில் ஏற்படும் இன்பம், துன்பம் இரண்டிலுமே விதியின் பங்கு இருக்கிறது.

விதியை வெல்ல முடியுமா ? 

             "விதியை மதியால் வெல்லலாம்" "குரைக்கின்ற நாய் கடிக்காது" "காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" முதலியன யாவும் நம் சான்றோர்களால் சொல்லப்பட்ட பழமொழி என்னும் தொகுப்பில் இடம் பெருவனவாகும்.

            விதியை மதியால் வெல்லலாம் என்பது ஜோதிட ரீதியாக விதி என்பது ஜாதகக் கட்டத்தில் இடம் பெரும் லக்கினம் மற்றும் அதன் அதிபதி ஆகியவற்றைக் குறிக்கும். மதி என்பது ஜாதகக்கட்டதில் இடம் பெரும் ராசி மற்றும் அதன் அதிபதியின் நிலையைக் குறிக்கும். இவற்றுள் விதி என்னும் லக்கினம் பாதிக்கப்பட்டிருந்தாலும் ராசி என்னும் மதி நல்ல நிலையில் இருந்தால் அந்த ஜாதகன் மதியால் விதியை வெல்லலாம் என்னும் அர்த்தத்தைச் சாரும்.

           ஒருவருக்கு விதிப்படி விதிக்கப்பட்டனவற்றை எவராலும் மாற்ற முடியாது. மாற்றி எழுதவும் முடியாது. ஒரு உயிர் பிறக்கும் போது அந்த நாள், நேரம், ரேகை ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஜாதகத்தின் ரீதியாக உள்ளவை உள்ளபடி நடக்கும். இதுவே ஜோதிடத்தின் மகத்துவம் ஆகும்.

          பரிகாரம், பூஜைகள் , மோதிரக்கல் அணிதல், சாந்தி செய்யுதல், எந்திர வழிபாடு, பெயர் மாற்றுதல் இவை எவற்றாலும் விதியை மாற்ற முடியாது. ஆன்மீக வழிபாடும், இறை பக்தியும் நமக்கு நம் ஜாதக ரீதியாக ஏற்படும் தீமைகளைக் குறைக்கும். மனதில் ஒரு நம்பிக்கையும், ஆருதலும் உருவாக வழி வகுக்கும். மற்றபடி விதியை எந்த ஒரு சக்தியாலும் வெல்ல முடியாது மாற்ற முடியாது தோற்கடிக்க முடியாது.

            மேலும் நீ செய்த தானமும், தர்மமும் இவ்வுலகில் இருக்குமாயின் விதியின் மரணத்தைக்கூட மறுபரிசீலனைச் செய்ய வைக்கலாம்.

ஜோதிடத்தை இகழ்வோர் ; 

           மனிதர்களின் விருப்பங்களும் செயல்களும் பல விதம். சிலருக்கு அரசியல் பிடிக்காது, சிலருக்கு சினிமா பிடிக்காது, சிலருக்கு விளையாட்டு பிடிக்காது, சிலருக்கு படிக்கப் பிடிக்காது, சிலருக்கு உழைக்க பிடிக்காது. அவ்வாறே சிலருக்கு ஜோதிடமும் பிடிக்காது. ஜோதிடம் என்பது மூடநம்பிக்கை, மூடநம்பிக்கைகளை முற்றிலும் தவிர் என்று இன்றும் சிலர் வாழ்ந்து வருகின்றனர். அதற்கு காரணம் விதி.

           ஆம், ஒருவர் அரசியல் மீது கவனம் செலுத்தவும் ஜாதக அமைப்பு வேண்டும். அரசியலில் பெரும் பதவி வகுக்கவும் ஜாதக அமைப்பு வேண்டும். அரசியலைப் புறக்கணிக்கவும் ஜாதக அமைப்பு வேண்டும். ஒருவர் சினிமாவை விரும்பவும் ஜாதக அமைப்பு வேண்டும். சினிமாவில் நட்சத்திரமாகச் ஜொழிக்கவும் ஜாதக அமைப்பு வேண்டும். சினிமாவை வெறுக்கவும் ஜாதக அமைப்பு வேண்டும். இவ்வாறே ஜோதிடத்தை நம்பவும் ஜாதக அமைப்பு வேண்டும். ஜோதிடத்தில் ஆழ்ந்தப் புழமைப் பெற்று பெரும் ஜோதிட நிபுணராகத் திகழவும் ஜாதக அமைப்பு வேண்டும். ஜோதிடத்தை இகழவும் ஜாதக அமைப்பு வேண்டும்.

இகழ்வோர் இகழகட்டும் ; 

             சிலர் ஜோதிடமென்பதெல்லாம் பைத்தியக்காரத்தனம் என்று சொல்லித் திரிவார்கள். ஒரு கட்டத்தில் அவருக்கு பெரும் கஷ்ட்டமும், தீர்க்க முடியாதத் துயரமும், தொடர் நஷ்டமும் ஏற்படும் போது பல கோணங்களில் அதற்குத் தீர்வு தேடி அலைவர். பிறகு எல்லாம் விதி என்று அவர்கள் வாயிலேயே சொல்லுவர். அதன் பிறகு தன் ஜாதகத்தைத் தேடி எடுத்து ஓர் சிறந்த ஜோதிடரை அணுகுவர். அப்போது அந்த ஜோதிடர் கூறிய இறந்தகால நிகழ்க்வுகளையும், தன் வாழ்வில் நடந்த நிகழ்வுகளையும் ஒப்பிட்டுப் பார்த்து ஜோதிடத்தின் மகத்துவமான சக்தியை உணருவர்.

            நேரமும் காலமும் சரியச் சரிய ஒரு கட்டத்தில் ஜோதிடம் என்பது உண்மை என்பதனை மனிதன் உணர்ந்து விடுகிறான். சிலர் கடைசி வரை ஜோதிடத்தை நம்பாமலேயே இறப்பர். அது அவரவர் விதி. நாம் யாரிடமும் வாதம் கொள்ளவோ கோபம் கொள்ளவோ தேவையில்லை. ஜோதிடத்தை இகழ்வோர் இகழட்டும்.

ஜோதிடத்தின் பயன்கள் ; 

              ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இறைவன் இருக்கிறான் என்பது எதனால் என்றால்  ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு ஜாதகம் இருப்பதனால் தான். ஒருவன் இந்த வாழ்க்கையில் அனுபவிக்கப் போகும் நன்மை தீமைகள், இன்ப துன்பங்கள் ஆகியவற்றை அவனுக்கு உணர்த்தி அவனை ஆற்றுப்படுத்தும் ஓர் ஆதி தெய்வம் ஜாதகம்.

              இன்று ஜோதிடக்கலையின் பங்கு மக்களின் பல்வேறு செயல்களுக்கும் பயன்பட்டு வருகின்றது. திருமணம் செய்ய, சுபகாரியம் செய்ய, வீடு வாங்க, தொழில் துவங்க, அரசியலில் நிற்க என்று மக்களின் எல்லாச் செயல்களுக்கும் ஜோதிடம் வழிகாட்டுகின்றது.

                                                                                                                                     ( தொடரும் )